NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 5,000 'சைபர் கமாண்டோக்கள்': மத்திய அரசு திட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 5,000 'சைபர் கமாண்டோக்கள்': மத்திய அரசு திட்டம்
    சந்தேகத்திற்குரிய சைபர் குற்றவாளிகளின் தேசிய பதிவேட்டை மத்திய அரசாங்கம் அமைக்கும்

    அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 5,000 'சைபர் கமாண்டோக்கள்': மத்திய அரசு திட்டம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 11, 2024
    08:54 am

    செய்தி முன்னோட்டம்

    சைபர் கிரைம்களை எதிர்த்துப் போராடுவதற்கான தீவிர முயற்சிகளின் ஒரு பகுதியாக, சந்தேகத்திற்குரிய சைபர் குற்றவாளிகளின் தேசிய பதிவேட்டை மத்திய அரசாங்கம் அமைக்கும்.

    அதே வேளையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 5,000 "சைபர் கமாண்டோக்களை" நிலைநிறுத்துவதற்கான திட்டங்களை பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளிப்படுத்தினார்.

    இந்த நிபுணர்கள், சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை அடையாளம் காணவும், அவர்களைப் பிடிக்கவும் காவல்துறை மற்றும் பிராந்திய அதிகாரிகளுடன் ஒத்துழைப்பார்கள்.

    நேற்று நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர் அமித்ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

    பயன்பாடு

    பதிவேடு எப்படி இருக்கும்?

    'சந்தேகப் பதிவேடு' என்பது இணைய மோசடிகளில் ஈடுபட்டுள்ள நபர்களின் விவரங்களைக் கொண்ட ஒரு மையப்படுத்தப்பட்ட தரவுத்தளமாக (Registry) இருக்கும்.

    இந்தத் தகவலை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் தங்கள் விசாரணைகளுக்காக அணுகலாம்.

    வங்கிகள் மற்றும் நிதி இடைத்தரகர்களுடன் இணைந்து, தேசிய சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்டல் (NCRP) அடிப்படையில், நிதிச் சுற்றுச்சூழலுக்குள் மோசடி இடர் மேலாண்மை திறன்களை மேம்படுத்த, பதிவகம் உருவாக்கப்படும்.

    மோசடி தணிப்பு மையம்

    CFMC என்றால் என்ன?

    நாட்டிற்காக பிரத்யேக சைபர் மோசடி தணிப்பு மையம் (CFMC) ஒன்றையும் உள்துறை அமைச்சர் அறிவித்தார்.

    CFMC, முக்கிய வங்கிகள், நிதி இடைத்தரகர்கள், பணம் திரட்டுபவர்கள், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள், IT இடைத்தரகர்கள் மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து சட்ட அமலாக்க முகவர் பிரதிநிதிகளை உள்ளடக்கியது.

    "ஆன்லைன் நிதிக் குற்றங்களைச் சமாளிக்க உடனடி நடவடிக்கை மற்றும் தடையற்ற ஒத்துழைப்புக்காக அவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள்" என்று உள்துறை அமைச்சகத்தின் (MHA) அறிக்கை கூறுகிறது.

    வெப்சைட்

    சைபர் கிரைம் விசாரணைக்கான சமன்வயா தளம்

    கூட்டு சைபர் கிரைம் விசாரணைகளை எளிதாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இணைய அடிப்படையிலான தொகுதியான சமன்வயா தளத்தையும் ஷா தொடங்கினார்.

    சைபர் கிரைம், டேட்டா ஷேரிங், க்ரைம் மேப்பிங், டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள சட்ட அமலாக்க முகவர்களிடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் தரவு களஞ்சியமாக இந்த தளம் செயல்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    சைபர் கிரைம்
    சைபர் பாதுகாப்பு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மத்திய அரசு

    பதவிகாலம் முடியும் முன்னரே UPSC தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா  இந்தியா
    விமானச் செயல்பாடுகள் சீரானது, பேக்லாக் அகற்றப்படுகிறது: மத்திய அரசு விமான சேவைகள்
    பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது மத்திய அரசு  பட்ஜெட்
    அரசு அதிகாரிகள் RSSஸில் சேர்வதற்கு விதிக்கப்பட்டிருத்த தடையை ரத்து செய்தது மத்திய அரசு  பாஜக

    சைபர் கிரைம்

    லைக்ஸ் பாலோவர்ஸ்களை அதிகரிக்க செய்வதாக நூதன மோசடி - சைபர் கிரைம் எச்சரிக்கை!  இன்ஸ்டாகிராம்
    பழைய பொருட்கள் வாங்க விற்க உதவும் செயலிகள் மூலம் நூதன மோசடி - எச்சரிக்கை! இந்தியா
    AI பெயரில் மால்வேர்களை செலுத்தும் Browser Extension-கள்.. பயனர்களே உஷார்! ஆன்லைன் மோசடி
    வாட்ஸ்அப்பில் அதிகரிக்கும் சர்வதேச ஸ்பேம் கால்கள்.. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது வாட்ஸ்அப்? வாட்ஸ்அப்

    சைபர் பாதுகாப்பு

    சமூக வலைத்தளப் பதிவு மூலம் ஆன்லைன் மோசடியில் சிக்கிய டெல்லியைச் சேர்ந்த பெண்! சமூக வலைத்தளம்
    தகவல்களை திருடும் புதிய 'மால்வேர்'.. தற்காத்துக் கொள்வது எப்படி? சைபர் கிரைம்
    கூகுள் பிளே ஸ்டோரில் ஸ்பேவேரால் பாதிக்கப்பட்ட செயலிகள்.. அதிர்ச்சியளித்த ரஷ்ய நிறுவனம்! கூகுள்
    சைபர் மோசடிகள் இருந்து பாதுகாத்துக் கொள்ள இலவச கருவிகளை வழங்கியிருக்கும் இந்திய அரசு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025