NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / நாடு முழுவதும் வரப்போகிறது ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ்;டாடா குரூப்புடன் இணையும் ஆப்பிள் நிறுவனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடு முழுவதும் வரப்போகிறது ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ்;டாடா குரூப்புடன் இணையும் ஆப்பிள் நிறுவனம்
    ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ்

    நாடு முழுவதும் வரப்போகிறது ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ்;டாடா குரூப்புடன் இணையும் ஆப்பிள் நிறுவனம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 14, 2022
    11:31 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆப்பிள் நிறுவனம், தனது தயாரிப்பு தொழிற்சாலைகளை இந்தியாவிற்கு மாற்றியதிலிருந்து, தனது கால் தடத்தை இந்தியாவில் வலுவாக பதிப்பதிற்கு ஆவன செய்கிறது.

    அதன் ஒரு படியாக ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ் திறக்க திட்டமிட்டுளதாக தெரிவித்தது.

    முதற்கட்டமாக, டாடா குரூப்புடன் இணைந்து ஆப்பிள் நிறுவனம், நாடு முழுவதும் இந்த மினி ஸ்டோர்களை திறக்க போவதாக தெரிவித்துள்ளது.

    150 ஆண்டுகள் பழமையான டாடா குழுமம் ஏற்கனவே நாடு முழுதும் கிரோமா ஸ்டோர்ஸ்-ஐ வெற்றிகரமாக நடத்திக்கொண்டுள்ளது.

    அதே குடையின் கீழ் டாடா நிறுவனம், ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ் திறக்க வாய்ப்புள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டு இருப்பதாகவும், ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

    ஆப்பிள் மினி ஸ்டோர்கள் ஒவ்வொன்றும் 500-600 சதுர அடி பரப்பளவில் அமைய போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் படிக்க

    ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ்

    இத்தகைய மினி ஸ்டோர்கள், நாடு முழுவதும் கிட்டத்தட்ட 100 இடங்களில் நிறுவ இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

    மேலும், இந்த மினி ஸ்டோர்ஸில் பெரும்பாலும் ஐபாட்ஸ்கள், ஐபோன்கள் மற்றும் வாட்சுகளை மட்டுமே விற்பனை செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஏனைய தயாரிப்புகள் அதன் பிரீமியம் ஸ்டோர்களில் விற்கப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்தியாவில் ஏற்கனவே சுமார் 160 ஆப்பிள் பிரீமியம் ஸ்டோர்கள் இருப்பதாகவும், ஆப்பிளின் முதல் கம்பெனி ஓன்ட் ஃபிளாக்ஷிப் ஸ்டோர் மும்பையில் திறக்கப்பட உள்ளதாகவும், முன்னணி செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றது.

    ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் தனது தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், உற்பத்தி திறனை அடுத்த 2 ஆண்டுகளில் மும்மடங்காக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது எனவும் கூறுகிறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    தொழில்நுட்பம்

    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025