LOADING...
வேற்று கிரகவாசிகள் பூமியின் தகவல்தொடர்புகளைக் கண்டறியலாம்: ஆய்வில் வெளியான புதிய தகவல்
வேற்று கிரகவாசிகள் பூமியின் தகவல்தொடர்புகளைக் கண்டறியலாம்: ஆய்வு தகவல்

வேற்று கிரகவாசிகள் பூமியின் தகவல்தொடர்புகளைக் கண்டறியலாம்: ஆய்வில் வெளியான புதிய தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 20, 2025
04:46 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாண பல்கலைக்கழகம் மற்றும் நாசாவின் ஜெட் ப்ரோபல்ஷன் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வின்படி, வேற்று கிரகவாசிகள் பூமியின் தகவல்தொடர்புகளைக் கேட்கக்கூடும் எனத் தெரிய வந்துள்ளது. Astrophysical Journal Letters என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, பூமிக்கும் விண்கலங்களுக்கும் இடையே அனுப்பப்படும் ரேடியோ சிக்னல்கள் அனைத்தும் கிரகங்களால் உறிஞ்சப்படுவதில்லை என்று கூறுகிறது. இந்த சிக்னல்களில் ஒரு பகுதி விண்வெளியில் தொடர்ந்து பயணித்து, வேற்று கிரக வாசிகளை சென்றடைய வாய்ப்புள்ளது. ஆய்வின் முன்னணி ஆசிரியரான பின்சென் ஃபான், கிரகங்கள் நேர்கோட்டில் அமையும்போது, சிக்னல்கள் மிகவும் வலுவாக இருக்கும் என்று விளக்கினார்.

நேர்கோடு

செவ்வாய்-பூமி நேர்கோட்டில் அமைந்தால் 77 சதவீத வாய்ப்பு

ஒரு வேற்று கிரக அறிவு, செவ்வாய்-பூமி நேர்கோட்டில் இருந்தால், பூமியின் தகவல்தொடர்புகளை கண்டறிய 77% வாய்ப்பு உள்ளது என ஆய்வு கண்டறிந்துள்ளது. இது வழக்கமான நிலையில் கண்டறியப்படுவதை விட மிக அதிகம். இந்த கண்டுபிடிப்பு, வேற்று கிரக அறிவைத் தேடுவதற்கான புதிய வழியை வழங்குகிறது. இனிமேல், விஞ்ஞானிகள் ரேண்டம் சிக்னல்களைத் தேடுவதற்குப் பதிலாக, மற்ற சூரிய மண்டலங்களில் உள்ள கோள்களின் இயக்கத்துடன் ஒத்துப்போகும் தகவல்தொடர்புகளைத் தேடலாம். இந்த ஆய்வு, வேற்று கிரகவாசிகள் நம்மை எவ்வாறு கண்டறியலாம் என்பதைப் பற்றிய புதிய கண்ணோட்டத்தை வழங்குவதோடு, நாம் அவர்களை எவ்வாறு கண்டறியலாம் என்பதற்கான புதிய உத்தியையும் முன்வைக்கிறது.