ஆதித்யா L1: முதல் சுற்று வட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இஸ்ரோ
நேற்று நண்பகல் 11.50 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஆதித்யா L1 விண்கலம். நேற்று விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு, 235 கிமீ x 19,500 கிமீ தூர சுற்று வட்டப்பாதையில் பூமியை சுற்றிவரத் தொடங்கியது ஆதித்யா L1. இந்நிலையில், அதன் முதல் சுற்று வட்டப்பாதை உயர்த்தும் நடவடிக்கையை இன்று மேற்கொண்டிருக்கிறது இஸ்ரோ. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, தற்போது 245 கிமீ x 22,459 கிமீ தூர சுற்று வட்டப்பாதையில், ஆதித்யா L1 பூமியைச் சுற்றிவரத் தொடங்கியிருப்பதாக எக்ஸில் பதிவிட்டிருக்கிறது இஸ்ரோ. இதனைத் தொடர்ந்து, ஆதித்யா L1ன் அடுத்த சுற்று வட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையானது செப்டம்பர் 5ம் தேதி, அதிகாலை 3 மணியளவில் மேற்கொள்ளப்படும் எனவும் தங்களுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறது இஸ்ரோ.