NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / மழைக்காலத்தில் துணிகளை காய வைப்பதில் சிரமமா? இதோ எளிய டிப்ஸ்கள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மழைக்காலத்தில் துணிகளை காய வைப்பதில் சிரமமா? இதோ எளிய டிப்ஸ்கள்!
    ஈரப்பதம் அதிகமாக இருந்தால், துணிகளில் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்

    மழைக்காலத்தில் துணிகளை காய வைப்பதில் சிரமமா? இதோ எளிய டிப்ஸ்கள்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 22, 2024
    08:13 am

    செய்தி முன்னோட்டம்

    பருவமழை தமிழ்நாட்டில் துவங்கி விட்டது.

    தெருவில் தண்ணீர், கொசு தொல்லை, சில நேரங்களில் மின்வெட்டு போன்ற பல பிரச்சனைகள் இருந்தாலும், அனைவரும் எதிர்கொள்ளும் ஒரே பிரச்னை- மழைக்காலத்தில் துணிகளை உலர்த்துவதில் ஏற்படும் சிரமங்கள் தான்.

    அதிலும் ஈரப்பதம் அதிகமாக இருந்தால், துணிகளில் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்.

    சில நேரங்களில் அது எவ்வளவு தான் வாசனை சோப்பு பயன்படுத்தினாலும், அந்த ஈர வாடை போவதில்லை.

    இதைத் தவிர்க்க உங்களுக்கு சில எளிய டிப்ஸ்:

    துணி காய வைக்க

    துணிகளை காய வைக்க சில எளிய முறைகள்:

    அதிக எடை துணிகள்: மழைக்காலத்தில், அதிக கனமான துணிகளை துவைப்பதை தவிர்க்கவும். அது எளிதில் காயாது.

    தண்ணீர் வடிக்கவும்: உலர்த்தும் முன் துணிகளில் உள்ள தண்ணீர் முழுமையாக வடிந்திருக்கிறதா என்பதை உறுதி செய்யவும்.

    இடம்: வீட்டிற்குள் கயிறு கட்டி காய்வதற்கு பதிலாக, 2, 3 ஸ்டாண்டுகளில் இடைவெளியுடன் துணிகளை உலர்த்தவும்.

    ஈரப்பதத்தை கட்டுப்படுத்தவும்: ஏர் பியூரிபையர் அல்லது கல் உப்பு பயன்படுத்துவது, வீட்டின் ஈரப்பதத்தை கட்டுப்படுத்த உதவும்.

    ஹேர் ட்ரையர்: தொடர் மழையின் போது, ஹேர் ட்ரையர் அல்லது டிஹைமிடிஃபையர் மூலம் துணிகளை வேகமாக உலர்த்தலாம்.

    துர்நாற்றம்

    துர்நாற்றத்தைத் தடுக்க சில எளிய முறைகள்

    வினிகர் சேர்க்கவும்: வாஷிங் மெஷினில் டிடர்ஜெண்டுடன் ஒரு கப் வினிகர் சேர்க்கவும். இதனால், துணிகளில் துர்நாற்றம் வராது.

    எலுமிச்சைச் சாறு: துணிகளை அலசிய பின்னர், கடைசி தண்ணீரில் எலுமிச்சைச் சாறு பிழிந்து, முக்கி எடுத்து உலர்த்தவும்.

    எண்ணெய் சேர்க்கவும்: லாவெண்டர் அல்லது யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களில் சில துளிகளை வாஷிங் மெஷினில் ஊற்றலாம். அல்லது ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எசென்ஷியல் எண்ணெய் மற்றும் தண்ணீர் கலந்து, துணிகளை காய்வதற்கு முன் லேசாக தெளிக்கவும்.

    இதனால், மழைக்காலத்தில் துணிகளை சுத்தமாகவும் நாற்றம் அடிக்காமலும் வைத்திருக்கலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மழை
    வீட்டு அலங்காரம்
    வீடு
    பருவமழை

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    மழை

    கவுகாத்தி விமான நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது; வைரலாகும் காணொளி அசாம்
    இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது: வானிலை ஆய்வு மையம் பருவமழை
    துபாயில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த பேய் மழை; நகரமே வெள்ளத்தில் தத்தளிப்பு துபாய்
    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீண்டும் மழை, இடியுடன் கூடிய மழை; பல விமானங்கள் ரத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    வீட்டு அலங்காரம்

    நீங்கள் வீட்டில் வைக்கக்கூடாத தாவர வகைகள் வாஸ்து
    பயன்படுத்திய தேயிலை இலைகளை தூக்கி எறிய வேண்டாம். இப்படியும் மறுசுழற்சி செய்யலாம் வீட்டு வைத்தியம்
    சிட்ரஸ் பழங்களின் தோல்களை இப்படியும் பயன்படுத்தலாம் ஆரோக்கிய குறிப்புகள்
    வீட்டில் நீங்கள் சுத்தம் செய்யாத ஆனால் செய்ய வேண்டிய அடிப்படை விஷயங்கள் வாழ்க்கை

    வீடு

    வீடு தேடுகிறீர்களா? ஒரு நல்ல இடத்தை எவ்வாறு தேர்வு செய்வது? வாழ்க்கை
    அமெரிக்காவில் தயாராகும் 100 வீடுகளைக் கொண்ட உலகின் முதல் 3டி பிரிண்டிங் குடியிருப்பு அமெரிக்கா
    ஒவ்வொரு வீட்டிலும் சோலார் பேனல் மின்சாரம்; 30,000 இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க உ.பி. அரசு முடிவு உத்தரப்பிரதேசம்
    துர்நாற்றம் அடிக்கும் வீட்டிற்குள் எப்போதும் நறுமணம் கமழ வைக்க சில அற்புத வழிகள் வீட்டு அலங்காரம்

    பருவமழை

    பருவமழை காலத்தில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்  சுற்றுலா
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  டெல்லி
    அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: தமிழ்நாட்டில் அதிகரித்த விலை  தமிழ்நாடு
    திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மழை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025