NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / செப்டம்பர் 10ம் தேதி - உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    செப்டம்பர் 10ம் தேதி - உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிப்பு
    செப்டம்பர் 10ம் தேதி - உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிப்பு

    செப்டம்பர் 10ம் தேதி - உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிப்பு

    எழுதியவர் Nivetha P
    Sep 10, 2023
    12:01 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு என நினைத்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

    ஆனால் எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்பது எதுவுமில்லை.

    அப்படியிருக்கையில் ஒருவர் தனது பிரச்சனையிலிருந்து தப்பிக்க தற்கொலை செய்து கொள்வதால் அவர்களை சார்ந்து இருப்போர் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பலரும் அறிவதில்லை.

    இதனிடையே, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கைபடி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்களாம்.

    அதன்படி உலகளவில் 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.

    தனிமை, பயம், ஏமாற்றம், வறுமை, குடும்ப பிரச்சனை போன்ற காரணங்கள் மக்களை தற்கொலை முயற்சிக்கு தூண்டுகிறது என்ற நிலை இருந்தது.

    தற்கொலை 

    தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்கொலை எண்ணிக்கை அதிகரிப்பு 

    தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் நூதனமுறையில் பலர் பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள்.

    மக்களுக்கு எவ்வளவு எடுத்து சொன்னாலும் பேராசை, பொழுதுபோக்கு என நினைத்து இதுபோன்ற மோசடிகளில் சிக்கி, அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள முடியாமல் பலர் தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள்.

    இந்நிலையில் தற்கொலைகளை தடுக்கும் விதமாக உலகநாடுகள்,உலக சுகாதார அமைப்புடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

    அந்த வகையில் கடந்த 2003ம்ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்-10ம்தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்தாண்டு,'செயல்பாடுகள் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்'என்னும் கருப்பொருள் கொண்டு இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

    தற்கொலை எண்ணத்தை தடுக்கும் வகையில் பள்ளி-கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தலாம்.

    தமிழகத்தில் இன்று பல்வேறு மருத்துவமனைகளில் இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    தற்கொலை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உலகம்

    உலக கொசு தினம்: கொசுக்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? வாழ்க்கை முறை நோய்கள்
    மீண்டும் பாகிஸ்தானில் பெரும் வெடிகுண்டு தாக்குதல்: 11 தொழிலாளர்கள் பலி  பாகிஸ்தான்
    "மக்களுக்கு என்னைப் பற்றி தெரியும்": அதிபர் தேர்தல் விவாதங்களைத் தவிர்க்கும் டிரம்ப் அமெரிக்கா
    2024 அமெரிக்க அதிபர் தேர்தல்: இந்தியாவுக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்த மிகப்பெரும் எச்சரிக்கை  அமெரிக்கா

    தற்கொலை

    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  கோவை
    கோவை DIG தற்கொலைக்கான காரணம் இதுதான்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் கோவை
    முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல்  கோவை
    கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை வழக்கு - 8 பேருக்கு சம்மன்  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025