NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / ரயிலின் பொது பெட்டிகளில் பயணிப்போருக்கு ரூ.23க்கு உணவு - ரயில்வேத்துறை முடிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரயிலின் பொது பெட்டிகளில் பயணிப்போருக்கு ரூ.23க்கு உணவு - ரயில்வேத்துறை முடிவு 
    ரயிலின் பொது பெட்டிகளில் பயணிப்போருக்கு ரூ.23க்கு உணவு - ரயில்வேத்துறை முடிவு

    ரயிலின் பொது பெட்டிகளில் பயணிப்போருக்கு ரூ.23க்கு உணவு - ரயில்வேத்துறை முடிவு 

    எழுதியவர் Nivetha P
    Jul 26, 2023
    06:08 pm

    செய்தி முன்னோட்டம்

    பயணம் செய்வது பெரும்பாலானோருக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும்.

    எனினும் நெடுந்தூரம் ரயில்கள் மூலம் பயணிக்கையில் நம்மால் நினைத்த இடங்களில் இறங்கி சாப்பிடமுடியாது.

    சிறப்பு ஏ.சி.கோச்.,போன்ற பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு டிக்கெட் எடுக்கும்பொழுதே உணவிற்கான பணமும் வசூலிக்கப்பட்டு அவர்களுக்கு ரயிலில் உணவு தயாரிக்கும் இடத்திலிருந்து உணவு கொடுக்கப்படும்.

    ஆனால் நார்மல் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு கிடைப்பது என்பது சிரமமாக தான் வெகுகாலமாக இருந்து வருகிறது.

    இதற்கான ஒரு திட்டத்தினை தான் தற்போது ரயில்வே துறை ஆலோசித்து ஓர் முடிவினை எடுத்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

    அதன்படி பொது பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு ரூ.20க்கு உணவும், ஒரு தண்ணீர் பாக்கெட் ரூ.3 என மொத்தம் ரூ.23க்கு முழு உணவு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    பயணம் 

    நார்மல் பெட்டிகள் முன்னர் எகனாமி உணவு கவுண்டர்கள் 

    குறைந்தவிலையில் நார்மல் பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு பலவகையான உணவுவகைகள் வழங்க ரயில்வே திட்டமிட்டுள்ள நிலையில், ரூ.20க்கு கிடைக்கும் வகை-1 உணவில் 7 பூரிகள், காய்கறி குழம்பு, ஊறுகாய் மற்றும் 200மில்லி.,தண்ணீர் உள்ளிட்டவை இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

    அதேபோல் வகை 2 உணவுக்கு பயணிகள் ரூ.50 செலுத்தவேண்டும்.

    அதில் பாவ்பாஜி, மசால்தோசை, ராஜ்மா-சாவல், சோலா-குல்ச்சா உள்ளிட்ட உணவுவகைகள் கிடைக்கும்.

    மேலும் முட்டை பிரியாணி ரூ.80, சிக்கன் பிரியாணி ரூ.100, வெஜ் பிரியாணி ரூ.70 உள்ளிட்ட விலைக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    ஆனால் இந்த உணவுகள் நார்மல் பெட்டியில் பயணிப்போருக்கு இருந்த இடத்திலிருந்து பெறமுடியாது.

    இந்த உணவுகளை பெற பயணிகள் ரயில்நிலையங்களில் நார்மல் பெட்டிகள் முன்னர் எகனாமி உணவு கவுண்டரினை அமைக்கப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பயணம்
    ரயில்கள்

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    பயணம்

    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்
    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு இந்தியா
    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது உலகம்
    விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA விமான சேவைகள்

    ரயில்கள்

    விரைவு ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை அறிவிப்பு  இந்தியா
    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் - தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!  வந்தே பாரத்
     சென்னையில் போக்குவரத்துக்கு ஒரே பயண டிக்கெட்! சட்டப்பேரவையில் அறிவிப்பு சென்னை
    குஜராத் மாநில போதட் ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலில் தீ விபத்து  குஜராத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025