NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / UPI மூலம் தவறான நபருக்கு அனுப்பிய பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    UPI மூலம் தவறான நபருக்கு அனுப்பிய பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?
    UPI மூலம் தவறான நபருக்கு அனுப்பிய பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?

    UPI மூலம் தவறான நபருக்கு அனுப்பிய பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 13, 2023
    11:25 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் முன்னணி பணப்பரிவர்த்தனை முறையாக விளங்கி வருகிறது யுபிஐ. ஒரு நாளில் 36 கோடி யுபிஐ பரிவர்த்தனைகளை இந்திய ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மேற்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

    கிட்டத்தட்ட ஸ்மார்ட்போன் மற்றும் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும், யுபிஐ சேவையைப் பயன்படுத்தலாம். இந்நிலையில், ஏதாவது ஒரு நேரம் தவறாக நாம் வேறு நபர்களுக்கு பணம் அனுப்பிவிடும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன.

    வேறு நபர்களுக்கு யுபிஐ மூலம் தவறாகப் பணம் அனுப்பியும் சில சமயங்களில் நாம் சிரமப்பட்டிருப்போம். அப்படி நடக்கும் பட்சத்தில், அந்தப் பணத்தை திரும்பப் பெறுவது எப்படி? அதற்கான வழிமுறைகள் என்ன?

    யுபிஐ

    பணத்தைத் திரும்பப் பெறும் வழிமுறைகள்: 

    முதலில் மிக எளிதான வழி, நாம் தவறாக பணத்தை அனுப்பியவரைத் தொடர்பு கொண்டு அந்தப் பணத்தை மீண்டும் நமக்கு அனுப்பச் சொல்வது.

    அந்த வேற்று நபரைத் தொடர்பு கொள்ள முடியாத அல்லது அவர் நம்முடைய பணத்தைத் திருப்பித் தராத பட்சத்தில், நம்முடைய சேவை வழங்குநரிடம் புகாரளிக்கலாம்.

    நாம் பணப்பரிமாற்றத்திற்குப் பயன்படுத்திய கூகுள்பே அல்லது போன்பே நிறுவனங்களிடம், நாம் பணம் அனுப்பியதற்கான ஆதாரம் (பொதுவாக ஸ்கிரீன்ஷாட்) நமது வங்கிக்கணக்கு விபரங்கள் மற்றும் நம்முடைய விபரங்களைக் கொடுத்து புகார் எழுப்பலாம்.

    இது குறித்து புகார் எழுப்பிய 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் நம்முடை பணம் நமக்கு திரும்ப வந்து விடும்.

    பணப் பரிவர்த்தனை

    அடுத்த கட்ட நடவடிக்கை: 

    சேவை வழங்குநரிடம் புகார் அளித்தும் நம்முடைய பணம் திரும்பி வராத பட்சத்தில், யுபிஐ சேவையை வழங்கி வரும் NPCI-யிடமும் (National Payments Corporation of India) புகார் அளிக்கலாம்.

    NPCI அமைப்பிடம் இங்கே கிளிக் செய்து புகார் அளிக்கும் பக்கத்திற்குச் சென்று புகார் அளிக்கலாம். இங்கே புகார் அளிக்கும் போதும், நம்முடைய வங்கிக் கணக்கு விபரங்கள், யுபிஐ விபரங்கள், பணப் பரிவர்த்தனை விபரங்கள், ஆதாரத்திற்காக பணப் பரிவர்த்தனை ஸ்கிரீன்ஷாட் மற்றும் வங்கிக் கணக்கு ஸ்டேட்மெண்ட் ஆகியவற்றை அளிக்க வேண்டியிருக்கும்.

    இவற்றிற்கிடையில், நேரடியாக நமது வங்கியையும் தொடர்பு கொண்டு பணத்தைத் திரும்பப் பெறுவதற்காகப் புகாரளிக்கலாம். அதற்கு மேற்கூறிய ஆவணங்களும், தகவல்களும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    யுபிஐ
    இந்தியா
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    யுபிஐ

    ஒரு லட்சம் யுபிஐ மோசடிகள்.. தகவல் பகிர்ந்த நிதியமைச்சகம்! ஆன்லைன் மோசடி
    ஆதார் எண்ணைக் பயன்படுத்தி யுபிஐ கணக்கை தொடங்கும் புதிய வசதி.. எப்படி? வங்கிக் கணக்கு
    இந்தியாவின் UPI முறை பிரான்ஸின் லைராவுடன் இணைக்கப்படுமா? பிரான்ஸ்
    இந்தியர்கள் இனி பிரான்சிலும் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் உலகம்

    இந்தியா

    பாலஸ்தீனியம், இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு இஸ்ரேல்
    பதுங்கு குழிகளில் தஞ்சம் அடையும் இஸ்ரேல் வாழ் மலையாளிகள் தீவிரவாதம்
    மருத்துவ பரிசோதனைக்காக தர்மசாலாவில் இருந்து டெல்லி செல்கிறார் தலாய்லாமா டெல்லி
    இந்தியாவில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா

    தொழில்நுட்பம்

    பேச்சுத்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கருவி டெல்லி
    சாட்டிலைட் மூலம் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறது கூகுள் ஆண்ட்ராய்டு
    Slack செயலி முடக்கம்: உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்கு இந்த மெசேஜிங் ஆப் முடங்கியது  தொழில்நுட்பம்
    ஜிமெயில் செயலியில் மொழிப்பெயர்ப்பு வசதியை அறிமுகப்படுத்திய கூகுள் கூகுள்

    தொழில்நுட்பம்

    இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-விண்வெளி ஆராய்ச்சி விண்வெளி
    இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-மருத்துவ வளர்ச்சி மருத்துவம்
    நீங்கள் அழுத்தும் key-இன் ஓசையை வைத்தே உங்கள் பாஸ்வேர்டைக் கண்டறியும் AI கருவிகள் செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவில் மேலும் 9 சூப்பர் கம்யூட்டர்களை உருவாக்குவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025