NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / மாணவர்களிடம் மனநல பிரச்சினைகளை ஏற்படுத்தும் அதீத ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாணவர்களிடம் மனநல பிரச்சினைகளை ஏற்படுத்தும் அதீத ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு
    மாணவர்களிடம் மனநல பிரச்சினைகளை ஏற்படுத்தும் அதீத ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு

    மாணவர்களிடம் மனநல பிரச்சினைகளை ஏற்படுத்தும் அதீத ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 09, 2023
    04:34 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை முறையில் சமூக ஊடகப் பயன்பாடு இல்லாத ஸ்மார்ட்போன் பயனர்களே இல்லை எனலாம்.

    பள்ளி மாணவர்கள் கூட ஸ்மார்ட்போன்களைக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகப் பயன்பாடு அவர்களது மனநலனை எவ்வாறு பாதிக்கிறது என்ற ஆய்வு ஒன்று சீனா, மலேஷியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஒருவரது மனநலனை, அவர் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நேரமே தீர்மானிப்பதாக இந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    இந்த ஆய்வு முடிவானது, மேற்கூறிய மூன்று நாடுகளைச் சேர்ந்த 622 மாணவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

    ஸ்மார்ட்போன்

    மாணவர்களின் மனநலனை பாதிக்கும் சமூக ஊடகப் பயன்பாடு: 

    சமூக ஊடகம் என்று மட்டுமில்லாமல், பொதுவாக அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களிடம் தாழ்வு மனப்பான்மை, அச்சம் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட மனநல பிரச்சினைகள் அதிகம் கண்டறியப்பட்டிருக்கின்றன.

    மேலும், ஒரு நாளில் சராசரியாக 4.8 மணி நேரத்திற்கும் மேலாக ஸ்மார்ட்போன் பயன்பாடு கொண்ட மாணவர்களிடம் மேற்கூறிய பிரச்சினைகள் அதிகமாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

    இந்த விதமான பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்பவர்கள் இளைஞர்களாகவே இருக்கிறார்கள். தனிமையைத் தவிர்க்க சமூக ஊடகங்களை நாடும் இவர்களால், நாளடைவில் நேரடி வாழ்விலும் சரியான ஈடுபாடு காட்ட முடியாத நிலை ஏற்படுவது கண்டறியப்பட்டிருக்கிறது.

    சமூக ஊடகம் அல்லது ஸ்மார்ட்போன் பயன்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடிகிறவர்களால் பிரச்சினை இல்லை. அப்படி கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியாதவர்களுக்கு மனநல உதவி அளிப்பது சிறந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்மார்ட்போன்
    மன அழுத்தம்

    சமீபத்திய

    முன்னாள் தவெக உறுப்பினர் கோவை வைஷ்ணவி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார் திமுக
    பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல் துருக்கி
    ஐபிஎல் 2025 ஜிடிvsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    'Ozempic teeth' என்றால் என்ன, எடை இழப்பு மருந்தின் புதிய பக்க விளைவினைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் எடை குறைப்பு

    ஸ்மார்ட்போன்

    பெங்களூருவில் அமைக்கப்பட்ட நத்திங் பாப்-அப் ஸ்டோரில் திரண்ட வாடிக்கையாளர்கள் பெங்களூர்
    மூன்று விதமான S23 FE ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவிருக்கும் சாம்சங் சாம்சங்
    அக்டோபரில் புதிய பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிடவிருக்கும் கூகுள் கூகுள்
    இணையத்தில் கசிந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் கேட்ஜட்ஸ்

    மன அழுத்தம்

    இந்தியாவை உலுக்கப்போகும் வெப்பம்: எச்சரிக்கும் உலகவங்கி வெதர்மேன்
    அதீத கவனக்குறைவா? அது இதனால் கூட இருக்கலாம்! மன ஆரோக்கியம்
    குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் கிடைக்கும் பலன்கள் ஆரோக்கியம்
    குளிர்கால நேரங்களில் பருவகால மாற்றங்கள் உண்மையில் ஹைப்போதைராய்டை பாதிக்கிறதா? தைராய்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025