ஏசி அறையில் கொசுக்கள் வராது என்பது உண்மையா? அறிவியல் கூறும் சுவாரசிய உண்மை
செய்தி முன்னோட்டம்
ஏசி ஆன் செய்யப்பட்ட அறையில் கொசுக்கள் கடிக்காது அல்லது வராது என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், ஏசியின் குளிரால் கொசுக்கள் முற்றிலுமாக இறந்துவிடுவதில்லை அல்லது அறையை விட்டு வெளியேறி விடுவதில்லை. மாறாக, ஏசியில் இருந்து வெளிவரும் அதிகப்படியான குளிர்ச்சி மற்றும் வறண்ட காற்று கொசுக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கி விடுகிறது. இதனால் தான் ஏசி ஓடும் போது கொசுக்களின் நடமாட்டம் அறையில் நமக்குத் தெரிவதில்லை.
மாற்றம்
கொசுக்களின் உடலில் ஏற்படும் அந்த விசித்திரமான மாற்றம்
கொசுக்கள் என்பவை குளிர்ந்த ரத்தமுடைய பூச்சி வகையை சேர்ந்தவை ஆகும்.
அதாவது அவற்றால் மனிதர்களைப் போலத் தங்களின் உடல் வெப்பநிலையைத் தாங்களாகவே கட்டுப்படுத்த முடியாது.
ஏசியின் வெப்பநிலை 20°C அல்லது அதற்கும் கீழே குறையும் போது, கொசுக்களின் உடல் வெப்பநிலையும் சடசடவெனக் குறைந்து அவற்றின் தசை இயக்கம் முடங்கிவிடும்.
இந்த நிலையை அறிவியல் ரீதியாக பார்பர் என்று அழைப்பர். இதனால் கொசுக்களால் பறக்க முடியாமல் ஒரே இடத்தில் முடங்கிவிடும்.
திறனை இழக்கும் கொசுக்கள்
மனிதர்களைக் கண்டறியும் திறனை இழக்கும் கொசுக்கள்
மனிதர்கள் வெளிவிடும் மூச்சுக்காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு மற்றும் வியர்வை வாசனை ஆகியவற்றைக் கொண்டே கொசுக்கள் மனிதர்களைக் கண்டறிகின்றன.
ஏசி அறையில் வீசும் பலத்த காற்று மற்றும் குறைவான ஈரப்பதம் காரணமாகக் கொசுக்களின் மோப்ப உறுப்புகள் செயலிழக்கின்றன.
இதனால் மனிதர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை மோப்பம் பிடித்துக் கண்டறிய முடியாமல் கொசுக்கள் குழப்பமடைந்து ஒரே இடத்தில் சுவரில் அமர்ந்து விடுகின்றன.
எப்படி தப்பிப்பது?
ஏசி அறையிலும் கொசுக்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி?
ஏசியை அணைத்துவிட்டு விசிறியை ஓடவிடும் போது, அறை மீண்டும் சூடாகி சுவரில் மயங்கிக் கிடந்த கொசுக்கள் மீண்டும் உயிர்பெற்று கடிக்கத் தொடங்கிவிடும்.
எனவே ஏசி அறையிலும் கொசுத் தொல்லை முழுமையாக இல்லாமல் இருக்கக் கதவு மற்றும் ஜன்னல்களை எப்போதும் மூடியே வைத்திருக்க வேண்டும்.
மேலும் அறையின் வெப்பநிலையை 21 டிகிரி செல்சியஸிற்கும் குறைவாகப் பராமரிப்பது கொசுக்களைப் பறக்க விடாமல் முற்றிலும் முடக்கி வைக்க உதவும்.