NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பதை பிரதமர் முடிவு செய்வார்: ஏக்நாத் ஷிண்டே
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பதை பிரதமர் முடிவு செய்வார்: ஏக்நாத் ஷிண்டே
    மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது

    மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பதை பிரதமர் முடிவு செய்வார்: ஏக்நாத் ஷிண்டே

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 27, 2024
    07:17 pm

    செய்தி முன்னோட்டம்

    "மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் யார் என்பது குறித்து பிரதமர் மோடி முடிவு செய்வார். அவரது முடிவுக்கு கட்டுப்படுவோம்," என மஹாராஷ்ட்ராவியின் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

    மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி பெரும் வெற்றியை பெற்று ஆட்சி அமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.

    தற்போது, ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். ஆனால் பாஜகவை சேர்ந்த தேவேந்திர ஃபட்நாவிஸ் பெயரை பரிந்துரைக்க சில கோரிக்கைகளும் எழுந்தன.

    இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் ஒன்று கூடி பேசியும் ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில் ஷிண்டேவின் இந்த பதில் வந்துள்ளது.

    ஷிண்டே உரை

    நிருபர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே

    "பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்தனர். அவர்களுக்கு என் நன்றி. இருவருடனும் தொலைபேசியில் பேசினேன். அந்த உரையாடலில், மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் நான் தடையாக இருக்க மாட்டேன் என்று உறுதி அளித்தேன்".

    "மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பிரதமர் மோடி எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம். தே.ஜ. கூட்டணி தலைவர் என்ற முறையில் அவர் முடிவு எடுக்குமாறு நான் பிரதமரிடம் கேட்டேன். அவர் எங்கள் குடும்பத்தின் தலைவர். அவர் எடுக்கும் முடிவை பா.ஜ.க.வினர் ஏற்றுக் கொள்வது போல், நாங்களும் ஏற்றுக் கொள்வோம். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கூட்டணி முடிவு செய்யும் முதல்வருக்கு முழு ஆதரவு அளிப்போம்," என்று ஷிண்டே நிருபர்களிடம் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மகாராஷ்டிரா

    மகாராஷ்டிரா எதிர்க்கட்சி சீட் ஒப்பந்தம் முடிவானது: தாக்கரேவின் கட்சி 21 இடங்களில் போட்டி இந்தியா
    மகாராஷ்டிரா பேரணியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார் நிதின் கட்காரி
    போர்ஷே விபத்தில் 2 பேரை கொன்ற புனே சிறுவனின் தந்தை கைது  காவல்துறை
    போர்ஷே விபத்து: புனேவை சேர்ந்த சிறுவன் 25 வயது வரை வாகனம் ஓட்ட தடை விபத்து

    பிரதமர் மோடி

    லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன் நகரில் இரண்டு புதிய இந்திய தூதரகங்கள்: பிரதமர் மோடி அமெரிக்கா
    3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார் டெல்லி
    விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000; 18வது தவணை பிஎம் கிசான் சம்மன் நிதி அக்டோபர் 5ஆம் தேதி வெளியீடு விவசாயிகள்
    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025