NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த மாட்டேன் - ஓபிஎஸ் உறுதி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த மாட்டேன் - ஓபிஎஸ் உறுதி 
    அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த மாட்டேன் - ஓபிஎஸ் உறுதி

    அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த மாட்டேன் - ஓபிஎஸ் உறுதி 

    எழுதியவர் Nivetha P
    Nov 30, 2023
    04:19 pm

    செய்தி முன்னோட்டம்

    கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடிகளை பயன்படுத்தி அறிக்கைகள் வெளியிடுவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

    இது தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தி வருவதால், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் இந்த செயல்பாடுகளுக்கு தடை விதிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போதைய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இவ்வழக்கு மீதான விசாரணை கடந்த 7ம்.,தேதி சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி சதீஷ்குமார் முன்னர் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, 'கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் இது குறித்த பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்'என்று ஓபிஎஸ் தரப்பில் கோரப்பட்டது.

    வழக்கு 

    வழக்கின் விசாரணை டிசம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவு 

    இதற்கு 'எத்தனை முறை கால அவகாசம் கேட்பீர்கள்?எத்தனை முறை வழக்கு தொடர்வீர்கள்?' என்று சரமாரியான கேள்விகளை எழுப்பிய நீதிபதி அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் உள்ளிட்ட அனைத்தையும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது என்று இடைக்கால தடை உத்தரவினை பிறப்பித்திருந்தார்.

    இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை இன்று(நவ.,30)மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

    அப்போது இடைக்கால தடை உத்தரவுப்படி அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடிகள், லெட்டர் பேட், உள்ளிட்டவற்றை பயன்படுத்த போவதில்லை என்று ஓபிஎஸ் தரப்பில் உறுதியான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்த உத்தரவாதத்தினை அவர்கள் மீறினால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகும்படி எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கினை டிசம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அதிமுக
    சென்னை உயர் நீதிமன்றம்
    ஓ.பன்னீர் செல்வம்
    எடப்பாடி கே பழனிசாமி

    சமீபத்திய

    ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா; நிதி ஆயோக் சிஇஓ தகவல் பொருளாதாரம்
    நிச்சயமற்ற நிலையில் எம்எஸ் தோனியின் ஐபிஎல் எதிர்காலம்; உதவி பயிற்சியாளர் ஸ்ரீராம் வெளியிட்ட தகவல் எம்எஸ் தோனி
    ராஜினாமாவெல்லாம் கிடையாது; பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் திட்டவட்டம் பங்களாதேஷ்
    மே மாத இறுதிவரை நின்ஜா ZX-4R பைக்கிற்கு க்கு ரூ.40,000 தள்ளுபடியை அறிவித்தது கவாஸாகி கவாஸாகி

    அதிமுக

    சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டார்  விருதுநகர்
    செந்தில் பாலாஜி பதவி நீட்டிப்பிற்கு எதிரான வழக்குகள் - சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைப்பு  கைது
    நாடாளுமன்ற தேர்தல் - திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து முதல்வர் கடிதம்  நாடாளுமன்றம்
    கிருஷ்ணகிரி வெடி விபத்து - சிபிஐ விசாரணை கோரும் அதிமுக எம்.பி.தம்பிதுரை சிபிஐ

    சென்னை உயர் நீதிமன்றம்

    வேங்கைவயல் விவகாரம்: 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு தமிழகம்
    அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு: எதிர்பாராமல் நடைபெற்ற திடீர் ட்விஸ்ட் செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜியின் மனைவி தொடுத்த ஆட்கொணர்வு மனு - 3வது நீதிபதி நியமனம்  செந்தில் பாலாஜி
    நில அபகரிப்பு வழக்கில் கைதான அமைச்சர் பொன்முடி விடுதலை  தமிழ்நாடு

    ஓ.பன்னீர் செல்வம்

    ஈரோடு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் அறிவிப்பு தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்-வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ். அதிமுக
    அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு - இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் கொண்டாட்டம் அதிமுக
    ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை ஜெயலலிதா

    எடப்பாடி கே பழனிசாமி

    தமிழகத்தில் பெண்கள் உரிமை தொகை ரூ.1000 குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் தமிழக அரசு
    டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில் சென்னை
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக
    அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியானது - பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் அதிமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025