NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'பழிவாங்காமல் விடமாட்டோம்': கதுவா பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'பழிவாங்காமல் விடமாட்டோம்': கதுவா பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம்

    'பழிவாங்காமல் விடமாட்டோம்': கதுவா பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 09, 2024
    01:59 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், அந்த தாக்குதலுக்கு பழி வாங்காமல் விடமாட்டோம் என பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமனே இன்று தெரிவித்துள்ளார்.

    "ஐந்து துணிச்சலான இதயங்களை இழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்... தேசத்திற்கான அவர்களின் தன்னலமற்ற சேவை எப்போதும் நினைவுகூரப்படும். அவர்களின் தியாகத்திற்கு நாங்கள் பழிவாங்கியே தீருவோம். அந்த தாக்குதலுக்குப் பின்னால் உள்ள தீய சக்திகளை இந்தியா வீழ்த்தும்" என்று அரமனே கூறினார்.

    நேற்று கதுவாவின் மச்செடி பகுதியில் ரோந்துக் குழுவினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஜூனியர் கமிஷன்ட் ஆபீசர் உட்பட ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், மேலும் ஆறு பேர் காயமடைந்தனர்.

    இந்தியா 

    இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட குழு பொறுப்பேற்றுள்ளது

    நேற்று பிற்பகல் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளால் இராணுவ டிரக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

    பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பின்னர் அருகில் உள்ள காட்டுக்குள் தப்பிச் சென்றனர். அவர்களைக் கண்டுபிடித்து பிடிப்பதற்காக அதிகாரிகள் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

    பாகிஸ்தானை தளமாகக் கொண்ட குழுவான காஷ்மீர் டைகர்ஸ், தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) இன் கிளை அமைப்பாகும்.

    இந்த அமைப்பு நேற்று நடத்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

    கடந்த இரண்டு நாட்களுக்குள் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

    "நான் ஆழ்ந்த வேதனையடைகிறேன்... அன்பிற்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    இந்திய ராணுவம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    ஜம்மு காஷ்மீர்

    பூஞ்ச் ​​தாக்குதல்: அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்4 கார்பைன் துப்பாக்கியை பயன்படுத்திய பயங்கரவாதிகள் அமெரிக்கா
    பூஞ்ச் ​​தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காக மொபைல் இன்டர்நெட் முடக்கம் இந்திய ராணுவம்
    ஜம்மு காஷ்மீர்: மசூதியில் வைத்து ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரி சுட்டு கொலை  காவல்துறை
    ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு சீனா ஆயுதங்களை சப்ளை செய்வதாக தகவல்  பயங்கரவாதம்

    இந்திய ராணுவம்

    அஜித்தின் தக்‌ஷா குழுவுக்கு கிடைத்த பெருமிதம்; இந்திய ராணுவத்திற்கு ட்ரோன் தயாரிக்க வாய்ப்பு நடிகர் அஜித்
    இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-கல்வி மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு  இந்தியா
    'நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் தான், ஆனால்' : சுதந்திர தின உரையில் பன்ச் வைத்த ராஜ்நாத் சிங் ராஜ்நாத் சிங்
    லடாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 9 வீரர்கள் உயிரிழப்பு லடாக்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025