NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளாவில் இருந்து புறப்பட்டது முதல் பெண்கள் ஹஜ் விமானம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளாவில் இருந்து புறப்பட்டது முதல் பெண்கள் ஹஜ் விமானம் 
    கேரளாவில் இருந்து புறப்பட்டது முதல் பெண்கள் ஹஜ் விமானம்

    கேரளாவில் இருந்து புறப்பட்டது முதல் பெண்கள் ஹஜ் விமானம் 

    எழுதியவர் Nivetha P
    Jun 09, 2023
    05:11 pm

    செய்தி முன்னோட்டம்

    கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹஜ் பயணமானது இந்தியாவில் இந்தாண்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் பயணத்தினை மேற்கொள்வதாகும்.

    அதன்படி அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு செல்வது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று(ஜூன்.,8) மாலை 6.45 மணியளவில் கேரளா மாநிலம் காலிகட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதன்முறையாக பெண்கள் மட்டும் பயணிக்கும் ஹஜ் விமானம் ஜெட்டா நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளது.

    ஐ.எக்ஸ்.3025 என்னும் எண் கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் 145 பெண் யாத்ரீகர்கள் மற்றும் 6 பெண் ஊழியர்களோடு புறப்பட்டு சென்றுள்ளது என்று கூறப்படுகிறது.

    ஹஜ் 

    மேலும் 16 மகளிர் மட்டும் விமானங்கள் இயக்கப்படும் 

    முதன்முறையாக ஆண்கள் துணை இல்லாமல் இஸ்லாமிய பெண்கள் மட்டுமே பயணிக்கும் இந்த விமானத்தினை சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் ஜான் பர்லா கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.

    அதன் பின்னர் பேசிய அவர், "பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் கொள்கையின் முக்கிய நிகழ்வாக இந்த விமானம் இயக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

    பெண்கள் மட்டும் பயணிக்கும் இந்த விமானத்தினை பெண் விமானிகளான கன்னிகா மெஹ்ரா மற்றும் கரிமா பஸ்ஸி ஆகியோர் இயக்கினர்.

    இதனை தொடர்ந்து, இந்த மகளிர் மட்டும் விமானம் போல மேலும் 16 விமானங்கள் கேரளாவில் இருந்து இயக்கப்படவுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    கேரளாவில் இருந்து மட்டும் இந்தாண்டு 45 வயதுக்கு மேற்பட்ட 2,733 பெண்கள் ஆண் துணையின்றி ஹஜ் பயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கேரளா

    கோழிக்கோடு ரயில் விபத்து: குற்றச்சாட்டப்பட்டவர் பரபரப்பு வாக்குமூலம் இந்தியா
    முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏகே ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி பாஜகவில் சேர்ந்தார் இந்தியா
    கல்வியை காவி மயமாக்கும் செயல்: NCERT புத்தக பிரச்சனை குறித்து கேரள முதல்வர் கருத்து பினராயி விஜயன்
    சபரிமலையில் வரும் 15ம் தேதி விஷூ கனி தரிசனம் - ஆன்லைன் முன்பதிவு துவக்கம் கோவில் திருவிழாக்கள்

    இந்தியா

    இந்தியாவின் வெளிநாட்டுக் குடியுரிமைக்கான தகுதி நீட்டிப்பு: குடியரசு தலைவர் உலகம்
    இந்தியாவில் பருவமழையின் போது பார்க்க வேண்டிய இடங்கள்! பருவகால மாற்றங்கள்
    பெண்ணின் நிர்வாண உடலை ஆபாசமாக கருதக்கூடாது: கேரள உயர்நீதிமன்றம்  உயர்நீதிமன்றம்
    இந்தியாவில் ஒரே நாளில் 124 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி கொரோனா

    கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 7,533 கொரோனா பாதிப்பு: 44 பேர் உயிரிழப்பு  இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 4,282 கொரோனா பாதிப்பு: 14 பேர் உயிரிழப்பு  இந்தியா
    தமிழகத்தின் சில மாவட்டங்களில் குறையும் கொரோனா பாதிப்பு  உலகம்
    இந்தியாவில் ஒரே நாளில் 3,325 கொரோனா பாதிப்பு: 17 பேர் உயிரிழப்பு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025