NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; வரம்பற்ற அதிகாரத்திற்கு கட்டுப்பாடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; வரம்பற்ற அதிகாரத்திற்கு கட்டுப்பாடு
    பாராளுமன்றம்

    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; வரம்பற்ற அதிகாரத்திற்கு கட்டுப்பாடு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 05, 2024
    05:10 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்திய ரயில்வே மற்றும் ஆயுதப் படைகளுக்கு அடுத்தபடியாக நாட்டின் மூன்றாவது பெரிய நில உரிமையாளரான வக்ஃப் வாரியத்தின் வரம்பற்ற அதிகாரங்களைக் கட்டுப்படுத்த வக்ஃப் சட்டத்தை மாற்றியமைக்க உள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் உயர்மட்டக் கூட்டத்தில், இந்த சட்டத்தில் மொத்தம் 40 திருத்தங்கள் மேற்கொள்வதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, புதிய மசோதா பாராளுமன்றத்தில் இன்னும் சில தினங்களில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சட்டத் திருத்தம்

    பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்யும் சட்டத்திருத்தம்

    முன்மொழியப்பட்ட திருத்தங்களின்படி, வக்ஃப் வாரியத்தால் உரிமைகோரப்படும் அனைத்து சொத்துக்களும் கட்டாயமாக சரிபார்க்கப்படும்.

    தற்போது, இதுபோன்ற சரிபார்ப்பு நடைமுறை எதுவும் இல்லாத நிலையில், வக்ஃப் வாரியம் எந்தவொரு சொத்தையும் உரிமைகோர முடியும். இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் கூடுதலாக, வக்ஃப் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பதை உறுதி செய்யவும் அரசு ஆலோசித்து வருகிறது.

    இந்த புதிய சட்டத் திருத்தங்கள் மூலம் மத்திய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் பெண்களுக்கு 2 இடங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், வக்ஃப் சொத்துக்கள் மூலம் ஆண்டுக்கு ரூ. 200 கோடி வருவாய் ஈட்டப்படும் ஈட்டப்படும் நிலையில், அவற்றையும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வக்ஃப் வாரியம்

    வக்ஃப் வாரியம் குறித்த அடிப்படைத் தகவல்கள்

    1954 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டம் மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்பட்டது. வக்ஃப் என்பது மத மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக கடவுளின் பெயரில் வழங்கப்படும் சொத்து.

    சட்ட அடிப்படையில், வக்ஃப் சட்டத்தின் பிரிவு 3 "வக்ஃப் என்பது முஸ்லீம் சட்டத்தால் பக்தி, மதம் அல்லது தொண்டு என்று அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நோக்கத்திற்காகவும் எந்தவொரு அசையும் அல்லது அசையாச் சொத்தையும் நிரந்தரமாக அர்ப்பணிப்பதாகும்" என்று கூறுகிறது.

    வக்ஃப் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருமானம் பொதுவாக கல்வி நிறுவனங்கள், கல்லறைகள், மசூதிகள் மற்றும் தங்குமிடங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுகிறது.

    குறிப்பிடத்தக்க வகையில், ஷரியா சட்டத்தின்படி, வக்ஃப் நிறுவப்பட்டதும், சொத்து வக்ஃபுக்கு அர்ப்பணிக்கப்பட்டால், அது எப்போதும் வக்ஃப் சொத்தாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    சட்டம்
    இந்தியா

    சமீபத்திய

    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா
    இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 55% உயர்ந்து, பெட்ரோலியம், வைர விற்பனையை முந்தியது ஸ்மார்ட்போன்
    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா
    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு

    மத்திய அரசு

    விமானம் ரத்து, தாமதம் குறித்து விஸ்தாராவிடம் மத்திய அரசு அறிக்கை கோரியுள்ளது விமானம்
    ஆப்பிள் ஐபோன், மேக்புக் மற்றும் ஐபேட் பயனர்களுக்கு உயர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு ஆப்பிள்
    'சத்தான பானம்' என்ற பிரிவில் இருந்து போர்ன்விடாவை அகற்ற மத்திய அரசு உத்தரவு  இந்தியா
    தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது தமிழகம்

    சட்டம்

    சிறார் பலாத்காரத்திற்கு மரண தண்டனை, ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பது, இன்னும் பல: புதிய குற்றவியல் சட்டங்களின் சிறப்பம்சங்கள் அமித்ஷா
    புதிய குற்றவியல் சட்டங்கள் மூலமாக மருத்துவர்களுக்கு கிடைக்கப்போகும் பாதுகாப்பு அமித்ஷா
    வேலை நேரத்திற்குப் பிறகு முதலாளிகளின் அழைப்பை புறக்கணிக்க உரிமை: ஆஸ்திரேலியாவில் அமலாகிறது புதிய சட்டம் ஆஸ்திரேலியா
    பிரபல சட்ட அறிஞர் ஃபாலி எஸ் நாரிமன் தனது 95வது வயதில் காலமானார் உச்ச நீதிமன்றம்

    இந்தியா

    ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க விதிகளில் திருத்தம் செய்தது மத்திய அரசு  ஜம்மு காஷ்மீர்
    ஒலிம்பிக்: 2012 லண்டன் விளையாட்டுப் போட்டியில் இந்தியா படைத்த சாதனைகள்  ஒலிம்பிக்
    ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் குறைந்தது: தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது பெரும்பான்மைக்கு கீழே உள்ளது மாநிலங்களவை
    நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றார் கே.பி.சர்மா ஒலி: பிரதமர் மோடி வாழ்த்து  நேபாளம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025