NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கைலாசா எங்கிருக்கிறது என ஜூலை 21 தெரிவிக்கவுள்ளதாக நித்தியானந்தா அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கைலாசா எங்கிருக்கிறது என ஜூலை 21 தெரிவிக்கவுள்ளதாக நித்தியானந்தா அறிவிப்பு

    கைலாசா எங்கிருக்கிறது என ஜூலை 21 தெரிவிக்கவுள்ளதாக நித்தியானந்தா அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 05, 2024
    01:29 pm

    செய்தி முன்னோட்டம்

    பாலியல் வழக்கு உட்பட பல வழக்குகளில் சிக்கி, புலனாய்வு அமைப்பினரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான நித்தியானந்தா, இந்திய எல்லையை தாண்டி தனக்கென்று ஒரு நாட்டை உருவாகியுள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தார்.

    அதற்கு பெயர் 'கைலாசா' எனவும் அறிவித்தார்.

    அங்கிருந்தபடியே பிரசங்கங்கள் செய்வது, மதக்கூட்டங்கள் நடத்துவது என ஆன்லைன் மதபோதகராக செயல்பட்டு வந்தார் நித்தியானந்தா.

    அதன் பின்னர், தன்னுடைய நாட்டுக்கென தனி பணம், தனி அரசியலமைப்பு, கொடி என பட்டியலையும் அவர் வெளியிட்டார்.

    இதுபோக, கைலாஸவிற்கு வர விருப்பம் தெரிவிப்பவர்கள் மின்னஞ்சல் மூலம் அணுகலாம் என அப்போது தெரிவிக்கவே, இளைஞர்கள் பலரும் அவர் எங்கிருக்கிறார், கைலாசா போவதற்கு வழி என்ன என தேடத்துவங்கியது.

    எனினும் கைலாசா போகும் மார்க்கம் மட்டும் வெளியாகவே இல்லை.

    கைலாசா

    கைலாசா எங்கிருக்கிறது என நித்தியானந்தா அறிவிக்கப்போவதாக தகவல்

    இந்த நிலையில் தான் ஈக்வடார் அருகே ஒரு சிறிய தீவில் கைலாசா என்ற தனி நாடு அமைந்துள்ளதாகவும், அந்த நாட்டுக்கு 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஷ்' என்று பெயரிட்டுள்ளதாக கூறப்பட்டது.

    எனினும் உலக வரைபடத்தில் அது எங்கிருக்கிறது என பலரும் தேடிய நிலையில் நித்தியானந்தா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    அதன்படி, கைலாசா இருக்கும் இடத்தை, வரும் ஜூலை 21ஆம் தேதி, குருபூர்ணிமா அன்று அறிவிக்க போவதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும், 'கைலாசாவாசியாக இப்போதே பதிவு செய்யுங்கள்' என்றும், இ-குடியுரிமை பெறுவதற்காக https://kailaasa.org/e-citizen/என்ற இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நித்தியானந்தா

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    நித்தியானந்தா

    மதுரை ஆதீன மடத்திற்கு உரிமை கோரும் நித்தியானந்தா - மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  உயர்நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025