NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க பயன்படுத்தவுள்ள எலி துளை சுரங்கம் என்றால் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க பயன்படுத்தவுள்ள எலி துளை சுரங்கம் என்றால் என்ன?
    சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க பயன்படுத்தவுள்ள எலி துளை சுரங்கம் என்றால் என்ன?

    சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க பயன்படுத்தவுள்ள எலி துளை சுரங்கம் என்றால் என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 28, 2023
    11:21 am

    செய்தி முன்னோட்டம்

    15 நாட்களுக்கும் மேலாக, உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் அடைப்பட்ட தொழிலாளர்களை மீட்க மாநில அரசு போராடி வருகிறது.

    இடிந்து விழுந்த சில்க்யாரா-பார்கோட் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை விடுவிக்க எடுக்கப்பட்ட பல முயற்சிகளுக்குப் பிறகு, பல பெரிய பின்னடைவுகளுக்கு பிறகு, உடைப்பட்ட ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் தற்போது எடுக்கப்பட்டு, தற்போது எலி துளை சுரங்க நடைமுறையைப் பயன்படுத்தி மீதமுள்ள சில மீட்டர்களில் துளையிட திட்டமிட்டுள்ளனர் நிபுணர்கள்.

    அதாவது மீட்பு குழு, இயந்திர உதவியின்றி, கையால் துளையிடுவது ஆகும்.

    card 2

    எலி துளை சுரங்கம் என்றால் என்ன?

    எலி துளை சுரங்கம் என்பது மேகாலயாவில் பரவலாக உள்ள குறுகிய, கிடைமட்ட சுரங்கங்களிலிருந்து நிலக்கரியைப் தோண்டியெடுக்க பயன்படுத்தப்படும் முறையாகும்.

    "எலி துளை" என்பது தரையில் தோண்டப்படும் ஆழ்துளை குழிகளைக் குறிக்கிறது.

    அதன் அகலம், ஒரு நபர், உள்ளே இறங்கி நிலக்கரியைப் தோண்டி எடுக்கும் அளவுக்கு பெரியது.

    குழிகளைத் தோண்டியவுடன், சுரங்கத் தொழிலாளர்கள் கயிறுகள் அல்லது மூங்கில் ஏணிகளைப் பயன்படுத்தி நிலக்கரி சுரங்கத்தை அடைவார்கள்.

    பிகாக்ஸ், மண்வெட்டிகள் மற்றும் கூடைகள் போன்ற பழமையான கருவிகளைப் பயன்படுத்தி நிலக்கரி கைமுறையாக பிறிதெடுக்கப்படும்.

    இந்த கருவிகளுடன், மனிதர்கள் உள்ளே இறங்கும் அளவிற்கு அந்த குழியின் அகலம் இருக்கும்

    card 3

    இரு வகை எலி துளைகள் 

    நிபுணர்களின் கூற்றுப்படி, எலி துளை சுரங்கம் பரவலாக இரண்டு வகைகளில் உள்ளது.

    ஒன்று, மலையின் பக்கவாட்டில், சரிவுகளில் குடைவது.

    இரண்டாவது முறை, பாக்ஸ்-கட்டிங் எனப்படுவது. அதில், 10 முதல் 100 சதுர மீட்டர் வரை ஒரு செவ்வக நுழைவாயில் தோண்டப்பட்டு, அதன் பின்னர், 100 முதல் 400 அடி ஆழம் வரை செங்குத்து குழி தோண்டப்படுகிறது.

    card 4

    சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு கவலைகளில் தடை

    எலி துளை சுரங்கம் என்பது பலதரப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களை முன்வைத்தது.

    பொதுவாக சுரங்கங்கள் ஒழுங்குபடுத்தப்படாதவை, மனித உயிருக்கு பல நேரங்களில் அச்சுரத்தில் விளைவிப்பவை.

    சரியான காற்றோட்டம், கட்டமைப்பு ஆதரவு அல்லது தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு கியர் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என பல காரணங்கள் முன்வைக்கப்பட்டன.

    கூடுதலாக, சுரங்க செயல்முறை, இயற்கை சீரழிவு, காடழிப்பு மற்றும் நீர் மாசுபாட்டை ஏற்படுத்தும் போன்ற காரணிகளால், இந்த எலி துளை நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டது.

    card 5

    எப்போது தடை செய்யப்பட்டது?

    தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) 2014 இல் இந்த நடைமுறைக்கு தடை விதித்தது.

    மேலும் 2015 இல் தடையை தொடர்ந்தது. NGT இது பற்றி கூறும் போது, "எலி துளை சுரங்கத்தின் மூலம், மழைக்காலத்தில், சுரங்கப் பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், எண்ணற்ற அசம்பாவிதங்கள் நடந்துள்ளன".

    மேலும், இந்த உத்தரவு மேகாலயாவுடன் தொடர்புடையது.

    காரணம் அங்கு உள்ள நிலக்கரி சுரங்கத்தில் தான் இது நடைமுறையில் இருந்தது.

    எனினும், இந்த உத்தரவை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    உத்தர்காசி
    சுரங்கபாதை
    மாநில அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உத்தரகாண்ட்

    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா
    உத்தராகண்ட் சிறையில் 1 பெண் உட்பட 44 பேருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    இந்தியாவின் முதல் கிராமமானது உத்தரகாண்டின் 'மனா' இந்தியா

    உத்தர்காசி

    உத்தர்காசி சுரங்கப்பாதை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அர்னால்ட் டிக்ஸ்; யார் அவர்? உத்தரகாண்ட்
    சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தம், ஏன்? உத்தரகாண்ட்
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணி: இனி மெஷின் வேண்டாம், கைகளாலேயே துளையிட திட்டம் உத்தரகாண்ட்

    சுரங்கபாதை

    உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இந்திய ராணுவம் வரவழைப்பு உத்தரகாண்ட்

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025