NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேப்டன் அன்ஷுமன் சிங்கின் பெற்றோர் மாற்ற விரும்பும் ஆயுதப் படைகளில் உள்ள 'Next of Kin' விதிகள் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேப்டன் அன்ஷுமன் சிங்கின் பெற்றோர் மாற்ற விரும்பும் ஆயுதப் படைகளில் உள்ள 'Next of Kin' விதிகள் என்ன?
    இந்த அளவுகோலை 'தவறானது' என்கிறார் ராணுவ வீரரின் தந்தை

    கேப்டன் அன்ஷுமன் சிங்கின் பெற்றோர் மாற்ற விரும்பும் ஆயுதப் படைகளில் உள்ள 'Next of Kin' விதிகள் என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 12, 2024
    02:02 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்றாண்டு, சியாச்சினில் மரித்துப்போன,கேப்டன் அன்ஷுமன் சிங், கடந்த வாரம் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த அமைதிக்கால வீர விருதான கீர்த்தி சக்ரா பெற்றார்.

    ஜனாதிபதி திரௌபதி முர்மு கையால் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

    இந்த விருதினை பெற்ற பெற்ற சில நாட்களுக்குப் பிறகு, சிங்கின் பெற்றோர்கள் இந்திய இராணுவத்தின் 'Next of Kin'(NOK) கொள்கையில் மாற்றங்களைச் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர்.

    இந்த அளவுகோலை 'தவறானது' என்று அழைத்த அனுஷுமனின் தந்தை ரவி பிரதாப் சிங், தங்கள் மகனின் மறைவுக்குப் பிறகு, அவரது விதவை மனைவி ஸ்மிருதி சிங் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் என்றும், தற்போது மகனின் உரிமையின் பெரும்பகுதியைப் அவர் மட்டுமே பெறுகிறார் என்றும் கூறி வருத்தப்பட்டார்.

    NOK விதிகள்

    ராணுவத்தில் செயல்பாட்டில் இருக்கும் NOK விதிகள் கூறுவது என்ன?

    ராணுவ வீரர் ஒருவர் இறந்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு நிதியுதவி அளிப்பதை இந்தக் கொள்கை உள்ளடக்குகிறது.

    அடுத்த உறவினர், அதாவது Next of kin என்ற சொல், ஒரு நபரின் மனைவி, நெருங்கிய உறவினர்கள், குடும்ப உறுப்பினர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரைக் குறிக்கிறது.

    திருமணம் ஆகாத ராணுவ வீரராக இருந்தால், அவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் (கார்டியன்), NOK என பட்டியலிடப்படுவார்கள்.

    இதுவே அவருக்கு திருமணம் ஆகிவிட்டால், அவர்களது பெற்றோரை விட அவர்களது மனைவியின் பெயர் NOK பட்டியலில் முன் சேர்க்கப்படும்.

    இதனால் ராணுவ சேவையின் போது தனிநபருக்கு ஏதாவது நேர்ந்தால், இழப்பீட்டுத் தொகை NOK க்கு வழங்கப்படும் என்று விதிகள் கூறுகின்றன.

    தந்தையின் கூற்று 

    இந்த விதிகளில் மாற்றம் வேண்டும் என்கிறார் அன்ஷுமனின் தந்தை

    இந்த NOK விதிகளில் தான் தற்போது மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்கிறார் ராணுவ வீரரின் தந்தை ரவி பிரதாப் சிங்கும் அவரது மனைவி மஞ்சு சிங்கும்.

    அவர்களின் கூற்றுப்படி, தங்கள் மகனின் மறைவுக்குப் பிறகு, அவர்களின் மருமகள் ஸ்மிருதி சிங் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் என்றும், தற்போது பெரும்பான்மையான உரிமைகளைப் அவரே பெறுகிறார் என்றும் கூறியுள்ளனர்.

    தங்களிடம் மகனின் நினைவாக ஒரு புகைப்படம் மட்டுமே எஞ்சியுள்ளது எனத்தெரிவித்தனர்.

    டிவி9 பாரத்வர்ஷிடம் பேசிய தந்தை சிங், "NOK க்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல் சரியானது அல்ல. இது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமும் பேசியுள்ளேன். அன்ஷுமானின் மனைவி இப்போது எங்களுடன் வசிக்கவில்லை. திருமணமாகி ஐந்து மாதங்களே ஆகின்றன, குழந்தை இல்லை" என்றார்.

    நிதியில் பங்கு

    தியாகியின் குடும்பத்தாருக்கு பிரிக்கவேண்டிய பங்கு பங்கு குறித்து விளக்கம் வேண்டும்

    "அதனால்தான் NOKஇன் வரையறை சரி செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தியாகியின் மனைவி குடும்பத்தில் தங்கினால், யாருக்கு எவ்வளவு பங்கு இருக்கிறது என்பதை முடிவு செய்ய வேண்டும், "என்று அவர் மேலும் கூறினார்.

    மற்ற பெற்றோர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக NOK விதிகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேப்டன் சிங்கின் தாயார் கூறினார்.

    "திருமணத்திற்குப் பிறகு, அவர் என் மகளுடன் நொய்டாவில் தங்கத் தொடங்கினார். ஜூலை 19, 2023 அன்று, அன்ஷுமானின் மரணம் குறித்த தகவல் கிடைத்ததும், நான் அவர்களை லக்னோவுக்கு அழைத்தேன்" என்று அன்ஷுமானின் தந்தை இந்தியா டுடேயிடம் கூறினார்.

    "ஆனால் இறுதி சடங்கிற்குபிறகு, அவர் (ஸ்மிருதி) மீண்டும் குர்தாஸ்பூருக்கு சென்றுவிட்டார்" என்று அவர் கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    கீர்த்தி சக்ரா விருது பெற்றதும் ஸ்ம்ரிதி சிங் 

    #SmritiSingh, widow of #CaptainAnshuman, shares story of her #husband's #commitment, #dedication pic.twitter.com/U4MEdLpZsg

    — The Tribune (@thetribunechd) July 6, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய ராணுவம்
    திரௌபதி முர்மு

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக

    இந்திய ராணுவம்

    48 மணிநேரத்திற்கும் மேலாக தொடரும் காஷ்மீர் என்கவுண்டர்: 3 அதிகாரிகள் பலி; ஒருவர் மாயம் ஜம்மு காஷ்மீர்
    அடர்ந்த காஷ்மீர் வனப்பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை நெருங்கியது இந்திய ராணுவம்  ஜம்மு காஷ்மீர்
    முடிவுக்கு வந்தது காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: கொல்லப்பட்டார் பயங்கரவாதி உசைர் கான் ஜம்மு காஷ்மீர்
    LAC-ல் ராணுவ முக்கியத்துவம் உள்ள இடத்தை குறிவைத்துள்ள இந்தியா இந்தியா-சீனா மோதல்

    திரௌபதி முர்மு

    பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும் பட்ஜெட் 2023
    2 புதிய நீதிபதிகள்: முழு பலத்துடன் இனி இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம் இந்தியா
    இன்று கோவை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாடு
    பிரதமர் மோடியை சந்தித்த ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025