NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'அணையை தெர்மோகோல் போட்டு மூடி வைத்துள்ளோம்': சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் நக்கல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'அணையை தெர்மோகோல் போட்டு மூடி வைத்துள்ளோம்': சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் நக்கல்
    'அணையை தெர்மோகோல் போட்டு மூடி வைத்துள்ளோம்' - செல்லூர் ராஜுக்கு பதிலளித்த துரைமுருகன்

    'அணையை தெர்மோகோல் போட்டு மூடி வைத்துள்ளோம்': சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் நக்கல்

    எழுதியவர் Nivetha P
    Oct 09, 2023
    01:46 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், கடந்த ஏப்ரல்.,21ம் தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில், அக்.,9ம்தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது என்று கடந்த மாதம் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

    அதன்படி, இன்று சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் துவங்கி நடந்து வருகிறது.

    இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கும் வினா-விடை நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜு, "அதிமுக ஆட்சியில் முல்லை பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு குடிநீர் வழங்குவதற்கான திட்டம் ரூ.1,296 கோடியில் துவங்கப்பட்டது. அதன் பணிகள் மெத்தனமாக நடந்துவரும் நிலையில், குடிநீருடன் கழிவுநீர் கலக்கிறது" என்று குற்றம்சாட்டி பேசினார்.

    "எனவே மதுரைக்கு சுத்தமான குடிநீர் வழங்க உடனே இப்பணிகளை முடிக்கவேண்டும்" என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

    பதில் 

    துரைமுருகன் பதிலால் சட்டப்பேரவையில் சிரிப்பலை 

    இதற்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "கம்பத்திலிருந்து, மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் பணியினை நீங்கள் துவங்கியிருந்தாலும், கிணறு தோண்டுவதற்கான அனுமதியினை பெறாமல் இருந்தீர்கள்" என்று கூறினார்.

    தொடர்ந்து அவர், "இதற்கான பணிகளில் இன்னும் 15 கி.மீ.,க்கு பைப்-லைன் போடும் பணிகள் தான் மீதமுள்ளது. இன்னும் 15 நாட்களுக்கு மதுரைக்கு 160 எம்.எல்.டி.குடிநீர் வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைப்பார்" என்று கூறியுள்ளார்.

    இதற்கிடையே குறுக்கிட்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "மதுரை மக்களுக்கு நிச்சயம் குடிநீர் கிடைக்கும். அணையில் தண்ணீர் வீணாகாமல் இருக்க தெர்மோகோல் போட்டு மூடி வைத்துள்ளோம். கவலை வேண்டாம்" என்று கூறினார்.

    இவரின் இந்த நகைச்சுவையான பதிலுக்கு பேரவையில் சிரிப்பலை எழுந்தது என்று கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    துரைமுருகன்
    அதிமுக
    தமிழ்நாடு
    குடிநீர்

    சமீபத்திய

    இரவில் டெல்லியை உலுக்கிய கனமழை; விமான சேவை மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு டெல்லி
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா; நிதி ஆயோக் சிஇஓ தகவல் பொருளாதாரம்
    நிச்சயமற்ற நிலையில் எம்எஸ் தோனியின் ஐபிஎல் எதிர்காலம்; உதவி பயிற்சியாளர் ஸ்ரீராம் வெளியிட்ட தகவல் எம்எஸ் தோனி

    துரைமுருகன்

    'மேகதாது அணைத் திட்டத்தை முறியடிப்போம்': துரைமுருகன் உறுதி கர்நாடகா
    இன்பநிதி பெயரில் பாசறை - போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிகள் சஸ்பெண்ட் திமுக
    உண்மைக்கு புறம்பான தகவல்களை அளிக்கிறது கர்நாடக அரசு - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    காவிரி நதிநீர் விவகாரம் - மத்திய அமைச்சரை சந்திக்கும் எம்.பி.க்கள் குழு கர்நாடகா

    அதிமுக

    முன்னாள் சபாநாயகர் தனபால் வாழ்க்கையினை தழுவிய படம் மாமன்னன் - இயக்குநர் பதில்  உதயநிதி ஸ்டாலின்
    இபிஎஸ் தலைமையில் ஜூலை 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்  எடப்பாடி கே பழனிசாமி
    ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம்  ஓ.பன்னீர் செல்வம்
    ரவீந்திரநாத் வெற்றி செல்லாது : மக்களவையில் ஒரு எம்பி கூட இல்லாத கட்சியாக மாறிய அதிமுக தேனி

    தமிழ்நாடு

    திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு  டெங்கு காய்ச்சல்
    தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் ராஜினாமா தூத்துக்குடி
    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  சிபிஐ
    வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு வெளியானது  சென்னை உயர் நீதிமன்றம்

    குடிநீர்

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தமிழக தலைமை செயலர் நேரில் ஆஜராக உத்தரவு  தேனி
    தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர் திறப்பு - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு தமிழ்நாடு
    சர்வ அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராடி, தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு   ராமேஸ்வரம்
    தருமபுரி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்துள்ளதாக புகார் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025