NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம்
    இந்த விவகாரத்தில் நயினார் நாகேந்திரனுக்கு நேற்று போலீஸார் இரண்டாவது சம்மன் அனுப்பியுள்ளனர்

    நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 26, 2024
    07:39 pm

    செய்தி முன்னோட்டம்

    நெல்லை பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரனுக்காக தேர்தல் பணப்பட்டுவாடா செய்வதற்காக ரூ. 4 கோடி எடுத்து சென்ற விவகாரத்தில் இருவர் கைதான நிலையில், இந்த விவகாரம் தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    தாம்பரம் ரயில் நிலையத்தில், முதற்கட்ட தேர்தலுக்கு முன்னதாக சில நாட்களுக்கு முன்பு, நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.

    அதனை கொண்டு சென்ற மூவரும் கைது செய்யப்பட்டு, காவல்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்த விவகாரத்தில் நயினார் நாகேந்திரனுக்கு நேற்று தாம்பரம் போலீஸார் இரண்டாவது சம்மன் அனுப்பியுள்ளனர்.

    நயினார் நாகேந்திரன் விளக்கம்

    "அந்தப் பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை":நயினார் நாகேந்திரன் 

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணத்துக்கும், தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என மறுத்துள்ளார்.

    "மே 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் கொடுத்துள்ளனர். முழுக்க முழுக்க என்னை குறிவைத்து செயல்படுகின்றனர். இதனை அரசியல் சூழ்ச்சியாகவே பார்க்கிறேன். தமிழகத்தில் ரூ.200 கோடிக்கு மேல் கைப்பற்றியுள்ளார்கள். ஆனால், ரூ.4 கோடியை யாரோ எங்கோ கொண்டு சென்றதில் எனது பெயரையும் சேர்த்து சூழ்ச்சி செய்கின்றனர்" என்றார்.

    "கைதான 3 பேர் மட்டுமல்ல, இதில் தொடர்புடைய நிறைய பேர் எனக்கு தெரிந்தவர்கள், எனது சொந்தக்காரர்கள் தான். யாரையும் இதில் குறை சொல்ல விரும்பவில்லை. காவல்துறை தன் கடமையை செய்கிறது. அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை"என்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நயினார் நாகேந்திரன்
    சிபிசிஐடி
    தேர்தல்
    தேர்தல் ஆணையம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    நயினார் நாகேந்திரன்

    அடி மேல அடி..நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு தேர்தல்
    4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவாகரத்தில், நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன் காவல்துறை

    சிபிசிஐடி

    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு
    ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் தொழில்நுட்பம்
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது தமிழ்நாடு

    தேர்தல்

    'தேர்தலின் போது நிலுவைத் தொகை வசூலிக்கப்படாது': காங்கிரசுக்கு வருமான வரித்துறையின் பதில் காங்கிரஸ்
    திருச்சி தொகுதியில் அதிமுகவிற்கு வெற்றியை பெற்று தருபவர்களுக்கு பரிசு: விஜயபாஸ்கர்  திருச்சி
    4 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி பிரதமர்
    இந்திய பிளாக் அணிக்கு ஆதரவு தெரிவித்து, சிராக் பாஸ்வானின் கட்சியில் இருந்து 22 தலைவர்கள் ராஜினாமா பீகார்

    தேர்தல் ஆணையம்

    அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் திரும்பப் பெறப்படும் தேர்தல் பத்திரங்கள்
    மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியா? போலி செய்திகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் எச்சரிக்கை  மக்களவை
    தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்க கால அவகாசம் கோரியது எஸ்பிஐ  உச்ச நீதிமன்றம்
    பறிபோன பொன்முடியின் MLA பதவி; விரைவில் திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் பொன்முடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025