NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
    ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

    ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

    எழுதியவர் Nivetha P
    Jan 31, 2023
    03:32 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 2014ம் ஆண்டு ஆந்திரா, தெலுங்கானா என்று இரண்டு மாநிலங்களாக ஆந்திர பிரதசம் பிரிந்தது.

    அப்பொழுது ஐதராபாத் இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக விளங்கும் என்றும், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ஆந்திரா தனி தலைநகரை அறிவிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

    அதனையடுத்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு அமராவதியை தலைநகராக நிர்ணயித்து பணிகளை மேற்கொண்டார்.

    ஆனால் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த பணிகள் யாவும் கிடப்பில் போடப்பட்டது.

    பின்னர் இந்த ஆளுங்கட்சி அரசு விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகராகவும், அமராவதியை சட்டமன்ற தலைநகராகவும், கர்னூலை நீதித்துறையின் தலைநகராகவும் மாற்றியமைக்க திட்டமிட்டது.

    முதல்வர் அறிவிப்பு

    அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலத்தை கொடுத்த மக்கள்

    இந்த திட்டம் மூலம் 13 மாவட்டங்களும் சம நிலையில் வளர்ச்சியடைய தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னதாக அறிவித்திருந்தார்.

    ஆனால் அமராவதியில் தலைநகர் ஏற்படுத்த நிலம் கொடுத்த அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அரசின் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆந்திர நீதிமன்றங்களில் வழக்குகளையும் தொடர்ந்தனர்.

    இந்நிலையில் தற்போது ஆந்திராவின் தலைநகரம் விசாகப்பட்டினம் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

    டெல்லியில் நடந்த சர்வதேச தூதரக கூட்டமைப்பு கூட்டத்தில் பேசுகையில் ஜெகன் மோகன் ரெட்டி இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    முதல் அமைச்சர்
    மாநிலங்கள்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    முதல் அமைச்சர்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! இந்தியா
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார் தமிழ்நாடு

    மாநிலங்கள்

    தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி! இந்தியா
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் தமிழக அரசு
    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு - 'ஆவின்' நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025