NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மேற்கு வங்காளத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவின் போது பெரும் வன்முறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மேற்கு வங்காளத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவின் போது பெரும் வன்முறை

    மேற்கு வங்காளத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவின் போது பெரும் வன்முறை

    எழுதியவர் Sindhuja SM
    Jun 01, 2024
    11:11 am

    செய்தி முன்னோட்டம்

    மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள குல்தாலி என்ற இடத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குள் ஒரு ஆத்திரமடைந்த கும்பல் ஊடுருவி, அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை(EVM) அருகில் உள்ள குளத்தில் வீசினர். இது அப்பகுதியில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது.

    சில வாக்குச்சாவடி முகவர்கள் சாவடிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விலக்கு உள்ளூர் மக்களிடையே கோபத்தைத் தூண்டியது. அதனால் அவர்கள் வாக்குசாவடி நிலையங்களுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தனர்.

    வாக்காளர் சரிபார்க்கப்பட்ட தணிக்கைத் தடம்(VVPAT) பொருத்தப்பட்ட EVMஐ வலுக்கட்டாயமாக அவர்கள் கைப்பற்றி, அதை குளத்தில் தூக்கி வீசினர்.

    மேலும், கொல்கத்தா ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதியில் உள்ள சதுலியா பகுதியில் பதற்றம் அதிகரித்தது.

    இந்தியா 

    நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு 

    இந்திய மதச்சார்பற்ற முன்னணி(ஐஎஸ்எஃப்) மற்றும் சிபிஐ(எம்) ஆகியவற்றின் தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இன்று காலை அப்பகுதியில் வன்முறை வெடித்தது.

    இந்த மோதலில் பல ISF உறுப்பினர்கள் காயமடைந்தனர். மேலும். அந்த இடத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் நிலைமை மோசமடைந்தது.

    மேற்கு வங்காளத்தில் 9 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கியது.

    டம் டம், பராசத், பாசிர்ஹாட், ஜெய்நகர், மதுராபூர், டயமண்ட் ஹார்பர், ஜாதவ்பூர், கொல்கத்தா தக்ஷின் மற்றும் கொல்கத்தாவில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மேற்கு வங்காளம்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மேற்கு வங்காளம்

    சிக்கிம் வெள்ளம்: 53 பேர் பலி, 143 பேர் மாயம்  சிக்கிம்
    சிக்கிம், மேற்கு வங்கத்தில் போலி பாஸ்போர்ட் கும்பலை கண்டறிந்த சிபிஐ சிக்கிம்
    கேள்வி கேட்க பணம் வாங்கிய குற்றச்சாட்டு- பாஜக எம்பிக்கு எதிராக அவதூறு நோட்டீஸ் அனுப்பிய செய்த திரிணமூல் எம்பி திரிணாமுல் காங்கிரஸ்
    ஐஐடி காரக்பூர் மாணவர், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை தற்கொலை

    இந்தியா

    சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: 87.98% மாணவர்கள் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் தேர்ச்சி சிபிஎஸ்இ
    'மாலத்தீவில் உள்ள விமானிகளுக்கு இந்திய விமானங்களை ஓட்ட தெரியவில்லை': மாலத்தீவின் அமைச்சர்  மாலத்தீவு
    மும்பை விளம்பர பதாகை விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு மும்பை
    ஈரான் துறைமுகத்தை இயக்க இந்தியா ஒப்பந்தம்: பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை ஈரான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025