NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிவகாசி கண்காட்சியில் பழங்கால விண்டேஜ் கேமரா - புகைப்பட கலைஞர் விளக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிவகாசி கண்காட்சியில் பழங்கால விண்டேஜ் கேமரா - புகைப்பட கலைஞர் விளக்கம்
    சிவகாசி கண்காட்சியில் பழங்கால விண்டேஜ் கேமரா - புகைப்பட கலைஞர் விளக்கம்

    சிவகாசி கண்காட்சியில் பழங்கால விண்டேஜ் கேமரா - புகைப்பட கலைஞர் விளக்கம்

    எழுதியவர் Nivetha P
    Aug 28, 2023
    03:59 pm

    செய்தி முன்னோட்டம்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடக்கும் கண்காட்சி ஒன்றில் பழங்கால கேமராக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    பழங்காலத்தில் விண்டேஜ் கேமராக்கள் தான் அதிகளவு பயன்பாட்டில் இருந்துள்ளது.

    முந்தைய காலகட்டத்தில் கேமரா என்பதே அபூர்வமான பொருளாக பார்க்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சிவகாசி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நூற்றாண்டு பழமையான விண்டேஜ் கேமராக்கள் எப்படி இருந்தது, எவ்வாறு செயல்பட்டது? என்று புகைப்பட கலைஞர் செல்வம் என்பவர் விளக்கம் அளித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, "அப்போதைய கேமரா நிறுவனங்கள் 120 ரோல் கேமராக்களை தான் தயாரித்தது. அதில் 12 புகைப்படங்கள் மட்டுமே எடுக்கக்கூடிய வகையில் பிலிம் இருக்கும். 12 புகைப்படங்கள் எடுத்தப்பின்னர் மீண்டும் புதிய ரோலினை வைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    கேமரா 

    முதன்முதலாக கண்டறியப்பட்ட கேமராவின் பெயர் 'ஒப்ஸ்க்யூரா'

    மேலும் அவர், ஒவ்வொரு முறையும் ஒரு புகைப்படம் எடுத்தப்பின்னர் பிலிமை ஒருமுறை கழற்றினால் மட்டுமே அடுத்த படம் எடுக்கமுடியும் என்றும்,

    டிஜிட்டல் கேமராக்களில் உள்ளது போல விண்டேஜ் கேமராக்களில் ஜும் செய்வது, போகஸ் செய்வது போன்ற வசதிகள் எதுவும் இருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

    தற்போதைய காலகட்டத்தில் கையில் வைத்திருக்கும் மொபைல் போன் மூலம் நினைத்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் ஓர் புகைப்படத்தினை எடுத்து பார்த்து கொள்ள முடிகிறது.

    ஆனால் அந்த காலத்தில் புகைப்படம் எடுப்பது என்பது அறிவு சார்ந்த நுட்பமான வேலையாக கருதப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    முதன்முதலாக கண்டறியப்பட்ட கேமராவின் பெயர் 'ஒப்ஸ்க்யூரா', இது சூரிய ஒளியினை படம்பிடிக்க பயன்படுத்தப்பட்டது என்றும், இது அளவில் மிக பெரியதாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விருதுநகர்
    மொபைல்

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள் தமிழ்நாடு
    சதுரகிரி மலையில் உள்ள சிறப்புமிக்க மருத்துவ குணமிக்க நாவல் நீரூற்று நீரிழிவு நோய்
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது பியூஷ் கோயல்
    மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.15க்கு வழங்குவேன் - ராமர் பிள்ளை  தமிழ்நாடு

    மொபைல்

    வெளியானது 'சாம்சங் கேலக்ஸி M14 5G' ஸ்மார்ட் போன்!  சாம்சங்
    ஷாவ்மியின் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்.. என்ன ஸ்பெஷல்?  ஸ்மார்ட்போன்
    ஏப்ரல் 18-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    வெளியானது 'ஷாவ்மி 13 அல்ட்ரா'.. என்னென்ன வசதிகள்?  ஸ்மார்ட்போன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025