NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வேங்கைவயல் விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேங்கைவயல் விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் 
    வேங்கைவயல் விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்

    வேங்கைவயல் விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் 

    எழுதியவர் Nivetha P
    Sep 14, 2023
    07:15 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆரம்பத்தில் இந்த வழக்கை சிபி-சிஐடி விசாரித்து வந்தது.

    அதன்பின்னர் இந்த வழக்கின் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று கூறி, இந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி கடந்த மார்ச் மாதம் வழக்கறிஞர் கே.ராஜ்கமல் மற்றும் மார்க்ஸ்-ரவீந்திரன் ஆகியோர், உயர்நீதிமன்றத்தில் தனிநபர் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து, 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் கூறி உத்தரவிட்டது.

    அறிக்கை 

    வழக்கின் விசாரணை நவம்பர் மாதம் 7ம் தேதிக்கு ஒத்திவைப்பு 

    இந்நிலையில் தற்போது சத்தியநாராயணன் ஆணையத்தின் இடைக்கால அறிக்கையானது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், சந்தேகிக்கும் 25 நபர்களிடம் மரபணு சோதனை நடத்தப்பட்டுள்ளது. 191 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது, 4 பேரிடம் அடுத்த 2 வாரத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என்னும் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதேபோல் சிபிசிஐடி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணை நிலையினை குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதனிடையே காவல்துறை நடத்திய விசாரணையானது மந்தநிலையில் இருக்கிறது என்று சத்தியநாராயணன் ஆணையம் வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து, இவ்வழக்கின் புலன் விசாரணையில் உள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையினை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி அமர்வு, இவ்வழக்கின் விசாரணையினை நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வேங்கை வயல்
    சென்னை உயர் நீதிமன்றம்
    சிபிசிஐடி
    சிஐடி

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    வேங்கை வயல்

    வேங்கைவயல் வழக்கில் முன்னேற்றம் இருக்கிறது: சிபிசிஐடி தகவல் தமிழ்நாடு
    தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பது தான் சமூக நீதியா: தமிழக ஆளுநர் ஸ்டாலின்
    வேங்கைவயல் விவகாரம்: தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் இந்தியா
    ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வேங்கைவயல் மக்கள் தமிழ்நாடு

    சென்னை உயர் நீதிமன்றம்

    தமிழ்நாட்டில் RSS பேரணிக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    அதிமுக பொது செயலாளர் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணை  அதிமுக
    ருத்ரன் படத்தின் வெளியீட்டிற்கு தடை விதித்த நீதிமன்றம்! கோலிவுட்
    இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு - உயர்நீதிமன்றங்களில் முகக்கவசம் கட்டாயம் கொரோனா

    சிபிசிஐடி

    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு
    ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் தொழில்நுட்பம்
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது தமிழ்நாடு

    சிஐடி

    தெலுங்கு தேசக்கட்சியினர் போராட்டம் - ஆந்திராவில் நிலவும் பதற்றம் கைது
    சந்திரபாபு நாயுடு ஏன் கைது செய்யப்பட்டார்? முழு விவரம்  ஆந்திரா
    ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஆந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025