NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வேங்கைவயல் விவகாரம்: 3 பேரின் ரத்தமாதிரிகள் சேகரிப்பு; தரமறுத்த 8 பேரின் மீது நடவடிக்கை எடுக்க திட்டம்
    வேங்கைவயல் விவகாரம்: 3 பேரின் ரத்தமாதிரிகள் சேகரிப்பு; தரமறுத்த 8 பேரின் மீது நடவடிக்கை எடுக்க திட்டம்
    இந்தியா

    வேங்கைவயல் விவகாரம்: 3 பேரின் ரத்தமாதிரிகள் சேகரிப்பு; தரமறுத்த 8 பேரின் மீது நடவடிக்கை எடுக்க திட்டம்

    எழுதியவர் Venkatalakshmi V
    April 25, 2023 | 05:02 pm 1 நிமிட வாசிப்பு
    வேங்கைவயல் விவகாரம்: 3 பேரின் ரத்தமாதிரிகள் சேகரிப்பு; தரமறுத்த 8 பேரின் மீது நடவடிக்கை எடுக்க திட்டம்
    வேங்கைவயல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரின் ரத்தமாதிரிகள் சேகரிப்பு; தரமறுத்த 8 பேரின் மீது விரைவில் நடவடிக்கை

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் என்ற பகுதியில், கடந்த டிசம்பர் மாதம், பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டிருந்தது. இதனால், அந்த பகுதி குழந்தைகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகாத செயலை யார் செய்தார் என்பது குறித்து வெள்ளனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் அந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி அதிகாரிகள், வேங்கைவயல் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 147 நபர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் இறுதியில், 11 பேர், சந்தேக பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

    11 பேரையும் DNA பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு 

    முதற்கட்டமாக, இந்த 11 பேரின் டிஎன்ஏ மாதிரிகளை சோதனை செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, பரிசோதனைக்கு அனுமதி அளித்தார். அதனை தொடர்ந்து, இன்று அவர்களுக்கு பரிசோதனை செய்ய அழைத்தபோது, மூவர் மட்டுமே, தங்களின் ரத்த மாதிரிகளை தர அனுமதித்துள்ளனர். மற்றவர்கள், தங்களின் வக்கீலிடம் கேட்ட பிறகு தான் ஒத்துக்கொள்வேன் என்றும், சாதி அடிப்படையில் தங்களை சிக்க வைக்க சூழ்ச்சி நடப்பதால் ஒத்துக்கொள்ள முடியாதென்றும் வாதாடினர். அதனால் 8 பேரின் மாதிரிகளை பெற முடியவில்லை. சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மட்டும் பரிசோதனைக்கு பிறகு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், மற்றவர்கள் மீது, நீதிபதி அடுத்தகட்ட நடவடிக்கைக்கு உத்தரவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

    DNA பரிசோதனை

    #JUSTIN | வேங்கைவயல் - ரத்தமாதிரிகள் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைப்பு#Vengaivayal | #DNA pic.twitter.com/JIerbC0naT

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 25, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    வேங்கை வயல்
    காவல்துறை
    காவல்துறை
    சிபிசிஐடி

    தமிழ்நாடு

    பேருந்துகளில் மாற்று திறனாளிகளிடம் இருந்து புகார் வரக்கூடாது! போக்குவரத்துறை அதிரடி  போக்குவரத்து விதிகள்
    அடுத்த சில மணி நேரத்தில், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் வானிலை அறிக்கை
    ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் இரண்டாம் நாளாக தொடரும் IT ரெய்டு சென்னை
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி

    தமிழ்நாடு செய்தி

    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம்: CBCIDயின் FIR அறிக்கை வெளியீடு  திருநெல்வேலி
    திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு NO : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு  தமிழ்நாடு
    பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாக்ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது தமிழ்நாடு
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் வீட்டில் கொள்ளையடித்த கில்லாடி பெண்; போலீஸார் கைது வைரல் செய்தி

    வேங்கை வயல்

    வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது தமிழ்நாடு
    வேங்கைவயல் விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு தமிழ்நாடு
    வேங்கைவயல் சம்பவத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்த மனு தமிழ்நாடு
    ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வேங்கைவயல் மக்கள் தமிழ்நாடு

    காவல்துறை

    காரில் சடலமாக கிடந்த வடமாநில இளைஞர் - காவல்துறை விசாரணை  சென்னை
    சென்னை ஐஐடி'யில் மேலுமொரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை சென்னை
    கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. கோவை
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  அரசு மருத்துவமனை

    காவல்துறை

    காதலி தூக்குபோட்டு உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலன்  தமிழ்நாடு
    இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - மு.க.ஸ்டாலின்  இந்தியா
    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விவகாரம் - விளக்கமளிக்க மாநகராட்சி நோட்டீஸ்  சென்னை
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி

    சிபிசிஐடி

    ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் தொழில்நுட்பம்
    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு
    கொடநாடு கொலை வழக்கு - எடப்பாடி ஜோதிடர், சசிகலாவை விசாரிக்க முடிவு  தமிழ்நாடு
    வேங்கைவயல் விவகாரம் - ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023