NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது
    குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டிருந்த மனித கழிவுகள் 1 பெண் மற்றும் 2 ஆண்களுடையது என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

    வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது

    எழுதியவர் Sindhuja SM
    Apr 21, 2023
    11:25 am

    செய்தி முன்னோட்டம்

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் என்ற பகுதியில், கடந்த டிசம்பர் மாதம், பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டிருந்தது.

    இதனால், அந்த பகுதி குழந்தைகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த தகாத செயலை யார் செய்தார் என்பது குறித்து வெள்ளனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

    ஆனால் அந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

    சிபிசிஐடி அதிகாரிகள் வேங்கைவயல் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 147 நபர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இந்த 147 பேரில் 119 பேர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. முக்கியாமாக, இதில் 11 பேர் சந்தேக நபர்கள் பட்டியலில் சேர்க்கப்ட்டுள்ளனர்.

    details

    குடிநீர் தொட்டியில் இருந்த மனித கழிவுகள் 1 பெண் மற்றும் 2 ஆண்களுடையது

    இந்த சந்தேக நபர்களில் புதுக்கோட்டை ஆயுதப்படை காவல்துறையில் பயிற்சி காவலராக பணியாற்றி வரும் முரளி ராஜா என்பவரும் ஒருவர் ஆவார்.

    முதற்கட்டமாக, இந்த 11 பேரின் டிஎன்ஏ மாதிரிகளை சோதனை செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    சம்பவம் நடந்த போது, முரளி ராஜா உட்பட 3 பேர், இது குறித்து வாட்சப்பில் பேசி கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதனால், அவர்களுடைய குரல் மாதிரியும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டிருந்த மனித கழிவுகள் 1 பெண் மற்றும் 2 ஆண்களுடையது என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    வேங்கை வயல்
    சிபிசிஐடி

    சமீபத்திய

    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19

    தமிழ்நாடு

    தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை அறிக்கை  புதுச்சேரி
    தமிழகத்தில் இன்று(ஏப்ரல்.,14) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் துவக்கம்  கடற்கரை
    தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி - நிபந்தனைகள் விதிப்பு  தமிழக காவல்துறை
    சென்னையில் தனியார் பராமரிக்கும் கழிவறை குறித்து புகாரளிக்க க்யூ.ஆர். குறியீடு  சென்னை

    வேங்கை வயல்

    வேங்கைவயல் வழக்கில் முன்னேற்றம் இருக்கிறது: சிபிசிஐடி தகவல் தமிழ்நாடு
    தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பது தான் சமூக நீதியா: தமிழக ஆளுநர் ஸ்டாலின்
    வேங்கைவயல் விவகாரம்: தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் தமிழ்நாடு
    ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வேங்கைவயல் மக்கள் தமிழ்நாடு

    சிபிசிஐடி

    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு
    ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் தொழில்நுட்பம்
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025