NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்டில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து: சிக்கிக்கொண்ட 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்டில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து: சிக்கிக்கொண்ட 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம் 
    மீட்பு பணிகளும் நிவாரண பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடந்துகொண்டிருக்கின்றன

    உத்தரகாண்டில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து: சிக்கிக்கொண்ட 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம் 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 12, 2023
    01:16 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த சுரங்கப்பாதை ஒன்று நேற்று இரவு இடிந்து விழுந்ததால் குறைந்தது 36 தொழிலாளர்கள் அந்த சுரங்கப்பாதையில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு(NDRF & SDRF) குழுக்கள் மற்றும் காவல்துறை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

    பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சில்க்யாரா மற்றும் தண்டல்கானை இணைக்கும் சுரங்கப்பாதையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

    சம்பவம் குறித்து அறிந்ததில் இருந்து அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

    கஜவாப்

     சிக்கியுள்ளவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை 

    "NDRF மற்றும் SDRF ஆகியவை சம்பவ இடத்தில் உள்ளன. அனைவரும் பாதுகாப்பாக திரும்ப கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம்," என்று முதல்வர் தாமி கூறியுள்ளார்.

    இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க துளையிடும் இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், யாரும் மூச்சு திணறி உயிரிழந்துவிடாமல் இருக்க ஆக்ஸிஜன் குழாய்களும் உள்ளே அனுப்பப்பட்டுள்ளன.

    எனினும், உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை வெளியேற்ற 2-3 நாட்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது வரை சிக்கியுள்ளவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    மீட்பு பணிகளும் நிவாரண பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடந்துகொண்டிருக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    காவல்துறை

    ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார் தவறானது - ஏடிஜிபி அருண் விளக்கம்  காவல்துறை
    பெற்றோர், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர்: குஜராத்தில் பரிதாபம்  குஜராத்
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது - போலீசார் அதிரடி  கம்யூனிஸ்ட்
    'லியோ' படத்தின் வெற்றி விழா - காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம்  லோகேஷ் கனகராஜ்

    காவல்துறை

    கேரள குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு  கேரளா
    க்ரைம் ஸ்டோரி: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டெலிவரி ஏஜென்ட்- டெல்லி அருகே கொடூரம்  க்ரைம் ஸ்டோரி
    லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி லியோ
    சின்னசேலத்தில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை அரசு பள்ளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025