NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சனாதனம் குறித்த பேச்சு - உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சனாதனம் குறித்த பேச்சு - உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகார் 
    உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சு - எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் புகார்

    சனாதனம் குறித்த பேச்சு - உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகார் 

    எழுதியவர் Nivetha P
    Sep 03, 2023
    01:29 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நேற்று(செப்.,2) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் 'சனாதன ஒழிப்பு' மாநாடு நடத்தப்பட்டது.

    இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

    அவர் கூறியதாவது, "சனாதன ஒழிப்பு மாநாடு என்று பெயரிட்டு இதில் எனக்கு வாழ்த்துரை வழங்கும் வாய்ப்பை அளித்த நிர்வாக குழுவுக்கு முதலில் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்" என்றும்,

    "சனாதனம் என்பது எதிர்ப்பது அல்ல, ஒழிப்பதாகும். கொரோனா, டெங்கு, மலேரியா, போன்ற நோய்களை நாம் எதிர்க்க முயற்சிக்க மாட்டோம், ஒழித்துக்கட்ட தான் முயல்வோம். அதுபோல் தான் இந்த சனாதானமும்" என்று கூறியுள்ளார்.

    அதனைத்தொடர்ந்து பேசிய அவர், "மக்களை சாதி வாரியாக பிரித்து தனித்து இருக்கவேண்டும் என சொன்னதுதான் சனாதனம்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    புகார் 

    இருபிரிவினர் இடையே பகைமையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளதாக குற்றச்சாட்டு 

    இந்நிலையில், உதயநிதியின் சட்டவிரோதமான இந்த பேச்சுக்கு சட்டப்படி அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்ற வழக்கறிஞரான வினீத் ஜிண்டால் புகாரளித்துள்ளார்.

    இதுகுறித்து டெல்லி காவல்துறையில் அவர் கொடுத்த புகாரில், உதயநிதியின் பேச்சு சனாதன தர்மத்திற்கு எதிராக மக்களை தூண்டும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் உள்ளது.

    கொசு, கொரோனா போன்றவற்றோடு இந்து மதத்தை ஒப்பிட்டுப்பேசி அதனை ஒழிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இந்து என்ற முறையில் இந்த பேச்சு எனது உணர்வுகளை புண்படுத்தியுள்ளது என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் சமூகத்தில் இருப்பிரிவினர் இடையே இவரின் பேச்சு பகைமையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    உதயநிதி பேசியது இந்திய தண்டனைச்சட்டம் 153A,153B,298,505,295A-உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் தண்டனைக்குரியது என்பதால் அவர்மீது எப்.ஐ.ஆர்.போட்டு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்வதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உதயநிதி ஸ்டாலின்
    உதயநிதி ஸ்டாலின்
    டெல்லி
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உதயநிதி ஸ்டாலின்

    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! மு.க ஸ்டாலின்
    மாமன்னன் தான் நடிகராக என் கடைசிப் படம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் திரைப்படம்
    தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய இடங்கள் யார் யாருக்கு? தமிழ்நாடு
    "நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்": அமைச்சர் உதயநிதி தமிழ்நாடு

    உதயநிதி ஸ்டாலின்

    பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி டெல்லி
    எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    கலைஞர் நடமாடும் நூலகத்தினை துவக்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    CSK-RR மேட்சை காண சேப்பாக்கத்தில் குவிந்த கோலிவுட் நட்சத்திர பட்டாளம் ஐபிஎல் 2023

    டெல்லி

    நடு வானில் ஏர் இந்தியா அதிகாரியை தாக்கிய பயணி  ஏர் இந்தியா
    தெலுங்கானா: தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு தெலுங்கானா
    டெல்லியில் இருந்து கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்டது இந்த ஆண்டின் 'ஹிமாலயன் ஒடிசி' பயணம் ராயல் என்ஃபீல்டு
    ஆம் ஆத்மியை ஆதரித்தது காங்கிரஸ்: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்  ஆம் ஆத்மி

    தமிழ்நாடு

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - 1.55 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்  தமிழக அரசு
    சஸ்பெண்ட் செய்யப்பட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் சேலம்
    384வது சென்னை தினம் - வரலாற்று சிறப்புகள் ஓர் பார்வை சென்னை
    உணவுப்பாதுகாப்புத்துறை திடீர் ஆய்வு - 100 கிலோவிற்கும் மேலான குட்கா பறிமுதல்  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025