NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு: 2 முக்கிய குற்றவாளிகள் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு: 2 முக்கிய குற்றவாளிகள் கைது 

    பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு: 2 முக்கிய குற்றவாளிகள் கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 12, 2024
    10:14 am

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரு ராமேஸ்வரம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மேற்கு வங்கத்தில் வைத்து கைது செய்துள்ளது.

    தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் கொல்கத்தாவில் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து கைது செய்யப்பட்டனர்.

    முசாவிர் ஹுசைன் ஷாசிப் என்பவர் ஓட்டலில் IEDஐ வைத்ததாகவும், குண்டுவெடிப்பைத் திட்டமிட்டு செயல்படுத்தியதற்குப் பின்னணியில் அப்துல் மதின் தாஹா என்பவர் மூளையாக இருந்ததாகவும் NIA கூறியுள்ளது.

    அவர்கள் இருவரும் ஏற்கனவே 2020 பயங்கரவாத வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் ஆவர்.

    அப்துல் மதீன் தாஹா ISIS-ன் பெங்களூர் மாட்யூல் என்று அறியப்படும் அல் ஹிந்த் உடன் தொடர்பில் இருந்ததாக NIA கூறியுள்ளது.

    பெங்களூரு

    பொய்யான அடையாளத்துடன் சுற்றி திரிந்த குற்றவாளிகள் 

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவறான அடையாளத்துடன் சுற்றி திரிந்ததாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

    மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் மேற்கு வங்கம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவைச் சேர்ந்த காவல்துறையினருக்கு இடையேயான ஒருங்கிணைந்த நடவடிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக NIA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மார்ச் 29 அன்று, பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனம், குற்றம் சாட்டப்பட்ட இருவரின் புகைப்படங்களையும் விவரங்களையும் வெளியிட்டது.

    குற்றவாளிகளை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    கடந்த மாதம், முக்கிய குற்றவாளிகளுக்கு தளவாட உதவி செய்த சிக்கமகளூரைச் சேர்ந்த முஸம்மில் ஷரீப் ஒருவரை என்ஐஏ கைது செய்து காவலில் எடுத்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    பெங்களூர்

    கிரிக்கெட்டில் கால் பதித்த நடிகர் சூர்யா- புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் நடிகர் சூர்யா
    கடைகளின் சைன்போர்டுகளில் கன்னடா கட்டாயம்: கலவர பூமியான பெங்களூர் வீதிகள் கர்நாடகா
    "இது இங்கிலாந்து இல்லை"- பெங்களூரின் 60% கன்னட உத்தரவுக்கு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆதரவு கர்நாடகா
    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தவிர்க்க பிரதமர் வேண்டுகோள் அயோத்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025