NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வடமாநில வாலிபரை தாக்கிய 2 பேர் மாமல்லபுரம் அருகே கைது
    இந்தியா

    வடமாநில வாலிபரை தாக்கிய 2 பேர் மாமல்லபுரம் அருகே கைது

    வடமாநில வாலிபரை தாக்கிய 2 பேர் மாமல்லபுரம் அருகே கைது
    எழுதியவர் Nivetha P
    Mar 09, 2023, 05:33 pm 0 நிமிட வாசிப்பு
    வடமாநில வாலிபரை தாக்கிய 2 பேர் மாமல்லபுரம் அருகே கைது
    வடமாநில வாலிபரை தாக்கிய 2 பேர் மாமல்லபுரம் அருகே கைது

    பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் நூர்ஆலம். 20 வயதாகும் இவர் மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி வேலை செய்துவருகிறார். இதனையடுத்து இவர் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு வந்துள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 பேர் பூஞ்சேரி கூட்ரோடு பகுதியில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிள் நூர் ஆலம் மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வண்டியை நிறுத்திவிட்டு வந்த அவர்கள் மூவரும் ஆரன் அழுத்தினால் ஒதுங்கி செல்ல தெரியாத என்று கூறி, நூர் ஆலமை பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்கள்.

    தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார் அளித்த வடமாநில வாலிபர்

    இதுகுறித்து நூர் ஆலம் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவர்களை தேடிவந்த நிலையில், சந்தேகத்தின்பேரில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அவர்களுள் ஒருவர் தப்பியோடியுள்ளார். மற்ற இருவரிடமும் விசாரணை நடத்தியபோது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார்கள். அதனால் அவர்களை போலீஸார் மாமல்லபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளார்கள். அதில் அவர்கள் பூஞ்சேரியை சேர்ந்த திவாகர்(20) மற்றும் வாயலூர் அழகேசன் நகரை சேர்ந்த ஜேம்ஸ்(29) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள்தான் அந்த பீகார் மாநில வாலிபரை தாக்கியுள்ளார்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. இதனைதொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    மகாபலிபுரம்
    காவல்துறை
    காவல்துறை

    மகாபலிபுரம்

    மாமல்லபுரம் செல்ல தடை - தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய டிஎஸ்பி இந்தியா
    'மக்களோடு மக்களாக சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன்' என்று காவல்துறையிடம் கூறிய எளிமையான முதல்வர் தமிழ்நாடு
    மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்தது மெரினா கடற்கரை

    காவல்துறை

    இரவு நேர வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஆடை கட்டாயம் காவல்துறை
    டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கைது - முதல்வர் ஸ்டாலின் கண்டனம் மு.க ஸ்டாலின்
    வருமான வரிசோதனை விவகாரம் - 2 திமுக கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் கைது  தமிழ்நாடு
    மூன்று மத குருமார்கள் முன்னிலையில் மகளுக்கு திருமணம்: வைரலாகும் டிஎஸ்பி வீட்டு திருமண பத்திரிகை!  காவல்துறை

    காவல்துறை

    பிரபலமான அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலில் திருட்டு முயற்சி  திருப்பூர்
    தமிழ்நாடு காவல் துறை மோப்ப நாய் பிரிவில், பெண் காவலர்கள் நியமனம்!  தமிழ்நாடு
    சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து - உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு  விருதுநகர்
    கலாஷேத்ரா விவகாரம் - 10க்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம்  சென்னை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023