NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி 
    ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி

    ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி 

    எழுதியவர் Nivetha P
    Dec 12, 2023
    12:46 pm

    செய்தி முன்னோட்டம்

    திருச்சி மாவட்டத்தினை சேர்ந்தவர் அமைச்சர் கே.என்.நேரு, இவரது தம்பி ராமஜெயம்.

    தொழிலதிபரான இவர் கடந்த 2012ம் ஆண்டு மார்ச்.29ம் தேதி தனது வீட்டில் இருந்து நடைப்பயிற்சி செய்ய சென்றுள்ளார்.

    அப்போது அவரை கடத்திய மர்ம கும்பல் அவரை கொலை செய்து திருச்சி-கல்லணை சாலையில் ஆற்றங்கரையோரம் தூக்கி வீசப்பட்டார்.

    இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஸ்ரீ ரங்கம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

    சோதனை 

    10 வருடங்களுக்கு மேல ஆகியும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை 

    இந்த வழக்கின் விசாரணை சிபிஐ, சிபிசிஐடி வசம் கொடுக்கப்பட்டும் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எந்தவொரு முன்னேற்றமும் இந்த வழக்கில் இல்லை.

    இந்நிலையில் இந்த வழக்கினை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது இவ்வழக்கினை சிறப்பு புலனாய்வு குழு ஒரு வருடமாக விசாரித்து வருகிறது.

    இதனையடுத்து இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட 13 பேரிடம் நீதிமன்ற அனுமதியோடு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    விசாரணை 

    தனித்தனியே விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழு முடிவு 

    மேலும் இவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்த புலனாய்வு குழு முடிவு செய்ததாகவும் தெரிகிறது.

    இத்தகைய சூழலில் தான் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை எதிரே ஆம்புலன்ஸ் மற்றும் ஹோம் கேர் நிறுவனம் நடத்தி வருபவர் பிரபாகரன்(45) என்பவரை நான்கு பேர் கொண்ட கும்பல் கொலை செய்துள்ளது.

    ராமஜெயம் கொலை வழக்கில் கடந்த 9ம் தேதி தான் சிறப்பு புலனாய்வு குழு இவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.

    கொலை 

    அலுவலகத்திற்குள் புகுந்து சரமாரியாக வெட்டி கொலை செய்த கும்பல் 

    இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ள நிலுவையில் ஜாமீனில் வெளிவந்துள்ள இவர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் நேற்று(டிச.,11)இரவு கையெழுத்திட்டுள்ளார்.

    அதன் பின்னர் தனது அலுவலகத்திற்கு சென்று அமர்ந்துள்ளார். அப்போது அவரது அலுவலகத்திற்குள் வந்த 3 மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

    தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறை அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கைது 

    கொலை செய்த நபர்களுள் 4 பேர் கைது

    இது குறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி பதிவுகள் கொண்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், திருச்சி-அரியமங்கலம் பகுதியினை சேர்ந்த பஷீர்(29), லட்சுமணன்(38), ரியாஸ் ராஜேஷ்(24), தஞ்சாவூரை சேர்ந்த ராஜேஷ் பைலட்(28) உள்ளிட்ட 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

    மேலும் தலைமறைவான அப்பு என்னும் ஹரிஹரனை தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட 4 பேரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்சி
    கொலை
    புலனாய்வு
    சிபிசிஐடி

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    திருச்சி

    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் விமானம்
    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி விமானம்
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் காவல்துறை
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம் கோவில்கள்

    கொலை

    பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி  குழந்தைகள்
    தேவகோட்டையில் காணாமல் போனதாக கூறப்பட்டவர் எலும்புக்கூடுகளாக மீட்பு  சிவகங்கை
    பெண் ஆசையால் பறிபோன ரவுடியின் உயிர், பரபரப்பு சம்பவம் - க்ரைம் ஸ்டோரி  காவல்துறை
    தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு - குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு தூத்துக்குடி

    புலனாய்வு

    சென்னையிலுள்ள பிரபல நகைக்கடையில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை சோதனை சென்னை
    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்  சென்னை

    சிபிசிஐடி

    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு
    ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் தொழில்நுட்பம்
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025