NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருச்சியில் 10ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் அடித்து கொலை - 3 பேர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருச்சியில் 10ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் அடித்து கொலை - 3 பேர் கைது
    திருச்சியில் 10ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் அடித்து கொலை - 3 பேர் கைது

    திருச்சியில் 10ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் அடித்து கொலை - 3 பேர் கைது

    எழுதியவர் Nivetha P
    Mar 11, 2023
    01:26 pm

    செய்தி முன்னோட்டம்

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியில் ஓர் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது.

    இதில் தோளூர்பட்டி கிராமத்தை சேர்ந்த கொத்தனார் கோபியின் மகன் மெளலீஸ்வரன்(15) 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் வழக்கம்போல் நேற்று(மார்ச்.,11) பள்ளிக்கு சென்றுள்ளார். பகல் 12.30 மணியளவில் பள்ளி வளாகத் திடலில் அமர்ந்து மாணவர்கள் படித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது மாணவர்கள் சிறு சிறு கற்களை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடியதாக தெரிகிறது.

    அப்போது தங்கள் மீது மெளலீஸ்வரன் தான் கற்களை வீசியதாக தவறாக எண்ணிய 3 சக மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனை தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்கள் 3 பேரும் மெளலீஸ்வரனை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    3 மாணவர்கள் கைது

    மரத்தில் மோதி மாணவனின் தலையில் படுகாயம்

    அப்போது அருகில் இருந்து மரத்தில் மெளலீஸ்வரன் தலை மோதி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    அவர் வலியால் அலறி துடித்துள்ளார், அவரது அலறல் சத்தம் கேட்ட ஆசிரியர்கள் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை நாமக்கல் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் அவரை சோதித்து பார்த்துவிட்டு அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

    இது குறித்து தகவலறிந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி வளாகம் முன்பு கூடி கோஷமிட்டனர்.

    இதனையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட அந்த 3 மாணவர்களை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்சி
    பள்ளி மாணவர்கள்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    திருச்சி

    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் விமானம்
    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி விமானம்
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் காவல்துறை
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம் கோவில்கள்

    பள்ளி மாணவர்கள்

    சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு இந்தியா
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு தமிழ்நாடு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025