NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருச்சியில் 10ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் அடித்து கொலை - 3 பேர் கைது
    இந்தியா

    திருச்சியில் 10ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் அடித்து கொலை - 3 பேர் கைது

    திருச்சியில் 10ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் அடித்து கொலை - 3 பேர் கைது
    எழுதியவர் Nivetha P
    Mar 11, 2023, 01:26 pm 0 நிமிட வாசிப்பு
    திருச்சியில் 10ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் அடித்து கொலை - 3 பேர் கைது
    திருச்சியில் 10ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் அடித்து கொலை - 3 பேர் கைது

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியில் ஓர் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இதில் தோளூர்பட்டி கிராமத்தை சேர்ந்த கொத்தனார் கோபியின் மகன் மெளலீஸ்வரன்(15) 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று(மார்ச்.,11) பள்ளிக்கு சென்றுள்ளார். பகல் 12.30 மணியளவில் பள்ளி வளாகத் திடலில் அமர்ந்து மாணவர்கள் படித்ததாக கூறப்படுகிறது. அப்போது மாணவர்கள் சிறு சிறு கற்களை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடியதாக தெரிகிறது. அப்போது தங்கள் மீது மெளலீஸ்வரன் தான் கற்களை வீசியதாக தவறாக எண்ணிய 3 சக மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்கள் 3 பேரும் மெளலீஸ்வரனை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    மரத்தில் மோதி மாணவனின் தலையில் படுகாயம்

    அப்போது அருகில் இருந்து மரத்தில் மெளலீஸ்வரன் தலை மோதி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் வலியால் அலறி துடித்துள்ளார், அவரது அலறல் சத்தம் கேட்ட ஆசிரியர்கள் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை நாமக்கல் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் அவரை சோதித்து பார்த்துவிட்டு அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி வளாகம் முன்பு கூடி கோஷமிட்டனர். இதனையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட அந்த 3 மாணவர்களை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    பள்ளி மாணவர்கள்
    திருச்சி

    பள்ளி மாணவர்கள்

    தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு!  தமிழ்நாடு
    தமிழ் பாடம் அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும் - தனியார் பள்ளிகள் இயக்குனர் தமிழ்நாடு
    தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து உறுதி செய்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்  தமிழ்நாடு
    மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    திருச்சி

    திருவாரூரில் பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் மீட்பு - 2 பேர் கைது  தமிழ்நாடு
    திருச்சியில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை போக்ஸோ வழக்கில் கைது  பள்ளி மாணவர்கள்
    திருச்சியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை - 4 பேர் கைது  கேரளா
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் சித்திரை தேரோட்ட திருவிழா கொண்டாட்டம்  தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023