NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மும்பையில் தொடரும் கனமழை: விமான சேவைகள் பாதிப்பு, பள்ளிகள் மூடல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மும்பையில் தொடரும் கனமழை: விமான சேவைகள் பாதிப்பு, பள்ளிகள் மூடல் 

    மும்பையில் தொடரும் கனமழை: விமான சேவைகள் பாதிப்பு, பள்ளிகள் மூடல் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 09, 2024
    09:57 am

    செய்தி முன்னோட்டம்

    மும்பையில் இன்று பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்ததால், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நேற்று, மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடைவிடாத மழை பெய்தது. இதனால், புறநகர் ரயில் சேவைகள் மற்றும் விமானச் செயல்பாடுகள் தடைபட்டன.

    இதனடியடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மும்பையின் சில பகுதிகளில் வெறும் 6 மணி நேரத்தில் 300 மி.மீ.க்கும் அதிகமான மழை பெய்தது. இ

    இன்று காலை 7 மணி வரை மழை நீதித்ததால், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

    இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மும்பைக்கு இன்று கனமழைக்கான 'ரெட்' அலர்ட் விடுத்துள்ளது.

    இந்தியா 

    பள்ளிகள் மூடல்; தேர்வுகள் ஒத்திவைப்பு 

    ஐஎம்டியின் எச்சரிக்கையை அடுத்து, மும்பை, தானே, நவி மும்பை, பன்வெல், புனே மற்றும் ரத்னகிரி-சிந்துதுர்க்கின் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் ஜூனியர் கல்லூரிகள் இன்று மூடப்பட்டுள்ளன.

    மும்பை பல்கலைக்கழகத்தில் இன்று(ஜூலை 9, 2024) நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

    நேற்று பெய்த இடைவிடாத மழை காரணமாக மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முடங்கின. புறநகர் ரயில் சேவைகள் மற்றும் விமான செயல்பாடுகளை இது பாதித்தது.

    மத்திய ரயில்வே சேவைகள் குறிப்பிடத்தக்க இடையூறுகளை எதிர்கொண்டன. மும்பை செல்லும் பல வெளியூர் ரயில்களும் சிக்கித் தவித்தன.

    இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஹார்பர் லைன் டிராக் இயக்கப்பட்டது.

    பரேல், காந்தி மார்க்கெட், சங்கம் நகர் மற்றும் மலாட் சுரங்கப்பாதை போன்ற பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மும்பை
    கனமழை
    இந்தியா

    சமீபத்திய

    ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவில் என்கவுண்டர்: தீவிரவாதிகளை தேடித்தேடி வேட்டையாடும் இந்திய ராணுவம்  ஜம்மு காஷ்மீர்
    ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி பயங்கரவாத தளங்களை இந்தியா எவ்வாறு தாக்கியது? ஆபரேஷன் சிந்தூர்
    இந்தியா-மியான்மர் எல்லையில் பதற்றம்: 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை மணிப்பூர்
    கனடாவின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி அமைச்சர்கள்! கனடா

    மும்பை

    புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே வெடிகுண்டு மிரட்டல்: உஷார் நிலையில் மும்பை காவல்துறை
    வெறும் 19 லட்சத்திற்கு ஏலம் போகவுள்ள தாவூத் இப்ராஹிமின் பரம்பரை வீடு  தாவூத் இப்ராஹிம்
    நாளை திறக்கப்பட இருக்கும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தின் வீடியோக்கள்  இந்தியா
    இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை மும்பையில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி  இந்தியா

    கனமழை

    ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த மக்கள் சென்னை வந்தடைந்தனர்  திருச்செந்தூர்
    தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மீட்பு பணி
    வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தூத்துக்குடி விரைந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு காரணமாக முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கேரளா

    இந்தியா

    வீடியோ:  மகாராஷ்டிராவில் கனமழைக்கு மத்தியில் தெருவுக்குள் புகுந்த 8 அடி நீள முதலை  மகாராஷ்டிரா
    டெல்லி விமான நிலைய டெர்மினல் 1 மூடப்பட்டதால் 22,000 பயணிகள் பாதிப்பு  டெல்லி
    இந்துக்களை பற்றி பிரதமர் மோடியும் ராகுல் காந்தியும் மக்களவையில் கடும் விவாதம்  மக்களவை
    சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு டெல்லி நீதிமன்றம் 5 மாத சிறைத்தண்டனை விதித்தது டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025