NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ட்ரோன் கேமராவை கோவை வனப்பகுதியில் பறக்கவிட்ட சுற்றுலாப்பயணிக்கு ரூ. 25000 அபராதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ட்ரோன் கேமராவை கோவை வனப்பகுதியில் பறக்கவிட்ட சுற்றுலாப்பயணிக்கு ரூ. 25000 அபராதம்
    அனுமதியின்றி ட்ரோன் கேமரா பறக்கவிட்ட நபருக்கு அபராதம் விதிப்பு

    ட்ரோன் கேமராவை கோவை வனப்பகுதியில் பறக்கவிட்ட சுற்றுலாப்பயணிக்கு ரூ. 25000 அபராதம்

    எழுதியவர் Nivetha P
    Jan 17, 2023
    07:39 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவை மாவட்டம் வால்பாறை மானாம்பள்ளி வன பகுதியில் உள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம்.

    இந்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம்.

    இங்குள்ள நல்லமுடி பூஞ்சோலை, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணியரின் அத்துமீறல்கள் அதிகம் நடந்து வந்ததாக தெரிகிறது.

    இதனை தடுக்க வனச்சரக அலுவலர் மணிகண்டன் என்பவரது தலைமையில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இத்தகைய சூழலில் முடீஸ் தாய்முடி எஸ்டேட் என்னும் பகுதியில் அனுமதியின்றி 'ட்ரோன்' கேமரா ஒன்று பறந்து கொண்டிருந்ததை ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் பார்த்ததாக கூறப்படுகிறது.

    அபராதம்

    அனுமதியின்றி ட்ரோன் கேமரா பறக்கவிட்ட நபருக்கு அபராதம் விதிப்பு

    இதனை தொடர்ந்து, வனத்துறையினர் அந்த ட்ரோன் கேமராவை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    நடத்தப்பட்ட விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த கென்னிஜாக்சன் (42) என்பவர் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு போட்டோ மட்டும் வீடியோக்கள் எடுத்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவதேஜாவின் உத்தரவு படி, தகுந்த அனுமதியின்றி வனப்பகுதியில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு புகைப்படம் எடுத்த குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட சுற்றுலாப்பயணிக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    இது குறித்த தகவலை மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU! நடிகர் அஜித்
    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து
    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! தமிழ்நாடு
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்

    தமிழ்நாடு செய்தி

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார் தமிழ்நாடு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் ரயில்கள்
    தமிழகத்தில் எங்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை-விளக்கமளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன் இந்தியா
    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025