Page Loader
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் காவலர்களுக்கு சொந்த ஊரிலே போஸ்டிங்: முதல்வர் ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் காவலர்களுக்கு சொந்த ஊரிலே போஸ்டிங்: முதல்வர் ஸ்டாலின்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 23, 2024
07:50 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக காவல்துறை சார்பில் நடைபெற்ற குடியரசுத்தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை முடிந்து, அவர்கள் பணிக்கு திரும்பும்போது அவர்கள் குழந்தைகளை பராமரிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுவது தொடர்பாக தொடர்ந்து அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்". "அவர்கள் கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் பணிமூப்புக்கு விலக்களித்து, அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டைச் சார்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது" என்றார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post