NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை!
    திருப்பதி ஏழுமலையானுக்கு 70 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை நன்கொடையாக வழங்கிய செவிலியர் (படம்: இந்து தமிழ்)

    70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 27, 2022
    11:10 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தை சேர்நத ஒரு பெண் பக்தர் திருப்பதி ஏழுமலையானுக்கு 70 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

    திருப்பதி கோவிலுக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் அசையா சொத்துக்கள் இருக்கின்றன.

    இந்த அசையா சொத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ.85,705 கோடியாகும்.

    இது தவிர, தங்கம், வைரம், ஆபரணங்கள் போன்ற பல கோடி மதிப்புள்ள பொருட்களும் திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவை சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் திருப்பதி கோவிலுக்கு 70 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை நேற்று நன்கொடையாக வழங்கியுள்ளார்.

    நன்கொடை

    நன்கொடையைப் பெற்றுக்கொண்ட திருப்பதி தேவஸ்தானம்!

    திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கோடிவலசா கிராமத்தில் என்.கே.நேமாவதி என்பவர் வசித்து வருகிறார்.

    ஒரு ஓய்வு பெற்ற செவிலியரான இவர் திருப்பதி ஏழுமலையானின் பெரும் பக்தர் ஆவார்.

    ஏழுமலையான் மீது இருக்கும் அதீத பக்தி காரணமாக இவர் தனக்கு சொந்தமான 70 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை திருப்பதிக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளார்.

    இந்நிலையில், நேற்று திருப்பதிக்கு சென்ற இவர், தேவஸ்தான எஸ்டேட் அதிகாரி மல்லிகார்ஜுனாவிடம் தன் சொத்தை ஒப்படைத்திருக்கிறார்.

    தற்போது, ஏழுமலையானின் சொத்து கணக்கில் இந்த வீடும் சேர்ந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பதி
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா
    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19

    திருப்பதி

    திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா? கொரோனா

    இந்தியா

    மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு! கொரோனா
    பிச்சை எடுத்த 1 லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்த பாட்டி! தமிழ்நாடு
    பென்ஷன் வாங்குவதற்கு வரிசையில் நின்ற முதியவர் பலி! வைரல் செய்தி
    பிரதமர் மோடி பிறந்த ஊருக்கு உலகப் பாரம்பரிய நகரம் என்ற தகுதி! மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025