NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மருத்துவ கழிவுகளை கண்ட இடத்தில் வீசுபவர்கள் மீது குண்டர் சட்டம்
    மருத்துவ கழிவுகளை கண்ட இடத்தில் வீசுபவர்கள் மீது குண்டர் சட்டம்
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    மருத்துவ கழிவுகளை கண்ட இடத்தில் வீசுபவர்கள் மீது குண்டர் சட்டம்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 18, 2023
    11:54 am
    மருத்துவ கழிவுகளை கண்ட இடத்தில் வீசுபவர்கள் மீது குண்டர் சட்டம்
    மருத்துவ கழிவுகளை சட்டவிரோதமாக திறந்த வெளியில் கொட்டுவதால் ஏற்படும் ஆபத்து குறித்து தமிழக அட்வகேட் ஜெனரல் ஏற்கனவே கூறி இருந்தார்

    மருத்துவ கழிவுகளை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டம் போட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலர் மற்றும் துணைச் செயலர் ஆகியோர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு(தெற்கு அமர்வு) ஒரு கடிதம் எழுதியுள்ளனர். திறந்த இடங்களில் மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டம் போடும் வண்ணம் தமிழ்நாடு சட்டம் 14-ன் கீழ் இருக்கும் 'குண்டர்' சட்டம்(1982) பற்றிய விளக்கத்தை விரிவுபடுத்த உள்ளதாக அதில் குறிப்பிடபட்டுள்ளது. மருத்துவ கழிவுகளை சட்டவிரோதமாக திறந்த வெளியில் கொட்டுவதால் ஏற்படும் ஆபத்து குறித்து தமிழக அட்வகேட் ஜெனரல் ஏற்கனவே அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    2/2

    சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் குழு

    சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் பி.செந்தில் குமார், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மார்ச்-2021 முதல் பதிவு செய்யப்பட்ட இது தொடர்பான வழக்குகளை ஆய்வு செய்தார். கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்கள், ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. காவல்துறை கண்காணிப்பாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், பஞ்சாயத்து கூடுதல் இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் அடங்கிய குழுவை மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைத்துள்ளது. இந்த குழு மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கழிவுகளை கொட்டுவதற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை கண்காணித்து, அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    இந்தியா

    தமிழ்நாடு

    இன்று கோவை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கோவை
    ஒரு மில்லியன் டாலர் நிதியை திரட்டும் வீட்டு உணவு சந்தையான குக்ர் நிறுவனம் சென்னை
    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடையில்லை மதுரை
    திருத்தணியில் வனத்துறையினர் சார்பில் வளர்க்கப்படும் 45,000 மரக்கன்றுகள் மாவட்ட செய்திகள்

    இந்தியா

    500 விமானங்களை களமிறக்கும் இண்டிகோ நிறுவனம்! முக்கிய நோக்கம் என்ன? விமான சேவைகள்
    AI எதிர்காலத்தை மாற்றும்! IBM CEO அரவிந்த் கிருஷ்ணா செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவில் கொண்டாடப்படும் நாட்டுப்புற திருவிழாக்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் சுற்றுலா
    புதுமையான அம்சங்களுடன் ஐபிஎல் 2023 போட்டியை இலவசமாக ஜியோ சினிமாவில் காணமுடியும் ஜியோ
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023