Page Loader
ஆன்லைனில் கட்டிட அனுமதிக்கான பட்டா சரிபார்ப்பு - தமிழக அரசு அசத்தல் 
ஆன்லைனில் கட்டிட அனுமதிக்கான பட்டா சரிபார்ப்பு - தமிழக அரசு அசத்தல்

ஆன்லைனில் கட்டிட அனுமதிக்கான பட்டா சரிபார்ப்பு - தமிழக அரசு அசத்தல் 

எழுதியவர் Nivetha P
Oct 19, 2023
03:26 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலத்தில் பத்திரப்பதிவு முறைகள் அனைத்துமே ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. பத்திரங்களை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் அனைத்தும் முன்னதாகவே பதிவேற்றம் செய்யப்படும் நிலையில், பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல் வெறும் 15 நிமிடங்களில் பத்திரப்பதிவு பணிகளை முடிக்க ஏதுவாக சிறப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பத்திரப்பதிவிற்கு வரும் மக்கள் கையில் பணம் எடுத்துவர வேண்டிய அவசியமுமில்லை. இதனிடையே கட்டுமான திட்டத்தின் அனுமதிப்பணிகளை ஒற்றை சாளர முறைக்கு மாற்ற புதிய இணையதளம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிஎம்டிஏ மற்றும் டிடிசிபி பணிகள் நடந்துவரும் நிலையில், கட்டிட அனுமதி கேட்டு தாக்கலாகும் விண்ணப்பங்களை விரைந்து ஆய்வு செய்து முடிக்க கூடுதலாக புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பட்டா 

சர்வே எண் கொண்டு உடனுக்குடன் சரிபார்க்க முடியும் என தகவல் 

இது குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் வீட்டு வசதித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், கட்டிட அனுமதி வழங்கும் பணிகளில் நிலத்தின் விவரங்கள் சரிபார்ப்பது மிக முக்கிய பணியாகும். அதற்காக விண்ணப்பதாரர்களிடம் இருந்து நிலத்தின் பட்டா, வரைபடம், நில வரைப்படம் உள்ளிட்டவை பெறப்படுகிறது. இந்நிலையில் ஆன்லைன் மூலமாகவே இனி சர்வே எண் கொண்டு உடனுக்குடன் நிலத்தின் நிலத்தின் பட்டா, வரைபடம் உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளது. இதற்கான வசதிகள் பிரத்யேகமாக சாப்ட்வேரில் செய்யப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் கட்டிட அனுமதிக்காக பட்டா உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து கொண்டு அலைய வேண்டிய நிலை தவிர்க்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் முதல்நிலை அலுவலரே இதனை சரிபார்க்க முடியும் என்னும் பட்சத்தில் அனுமதி பெறுவதற்கான நேரமும் குறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிகிறது.