NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆன்லைனில் கட்டிட அனுமதிக்கான பட்டா சரிபார்ப்பு - தமிழக அரசு அசத்தல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆன்லைனில் கட்டிட அனுமதிக்கான பட்டா சரிபார்ப்பு - தமிழக அரசு அசத்தல் 
    ஆன்லைனில் கட்டிட அனுமதிக்கான பட்டா சரிபார்ப்பு - தமிழக அரசு அசத்தல்

    ஆன்லைனில் கட்டிட அனுமதிக்கான பட்டா சரிபார்ப்பு - தமிழக அரசு அசத்தல் 

    எழுதியவர் Nivetha P
    Oct 19, 2023
    03:26 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் பத்திரப்பதிவு முறைகள் அனைத்துமே ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

    பத்திரங்களை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் அனைத்தும் முன்னதாகவே பதிவேற்றம் செய்யப்படும் நிலையில், பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

    அதேபோல் வெறும் 15 நிமிடங்களில் பத்திரப்பதிவு பணிகளை முடிக்க ஏதுவாக சிறப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் பத்திரப்பதிவிற்கு வரும் மக்கள் கையில் பணம் எடுத்துவர வேண்டிய அவசியமுமில்லை.

    இதனிடையே கட்டுமான திட்டத்தின் அனுமதிப்பணிகளை ஒற்றை சாளர முறைக்கு மாற்ற புதிய இணையதளம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதில் சிஎம்டிஏ மற்றும் டிடிசிபி பணிகள் நடந்துவரும் நிலையில், கட்டிட அனுமதி கேட்டு தாக்கலாகும் விண்ணப்பங்களை விரைந்து ஆய்வு செய்து முடிக்க கூடுதலாக புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    பட்டா 

    சர்வே எண் கொண்டு உடனுக்குடன் சரிபார்க்க முடியும் என தகவல் 

    இது குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் வீட்டு வசதித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், கட்டிட அனுமதி வழங்கும் பணிகளில் நிலத்தின் விவரங்கள் சரிபார்ப்பது மிக முக்கிய பணியாகும்.

    அதற்காக விண்ணப்பதாரர்களிடம் இருந்து நிலத்தின் பட்டா, வரைபடம், நில வரைப்படம் உள்ளிட்டவை பெறப்படுகிறது.

    இந்நிலையில் ஆன்லைன் மூலமாகவே இனி சர்வே எண் கொண்டு உடனுக்குடன் நிலத்தின் நிலத்தின் பட்டா, வரைபடம் உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளது.

    இதற்கான வசதிகள் பிரத்யேகமாக சாப்ட்வேரில் செய்யப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் கட்டிட அனுமதிக்காக பட்டா உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து கொண்டு அலைய வேண்டிய நிலை தவிர்க்கப்படும் என்று கூறியுள்ளார்.

    மேலும் முதல்நிலை அலுவலரே இதனை சரிபார்க்க முடியும் என்னும் பட்சத்தில் அனுமதி பெறுவதற்கான நேரமும் குறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    தமிழ்நாடு

    சமீபத்திய

    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025

    தமிழக அரசு

    விநாயகர் சிலைகளை கரைக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியை பதவி நீக்க அறிவுறுத்தும் உயர் நீதிமன்றம் திமுக
    விநாயகர் சதுர்த்தி அன்று நியாயவிலை கடைகள் இயங்காது: தமிழக அரசு அறிவிப்பு  விநாயகர் சதுர்த்தி
    காவிரி விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற தொல்லை தருகிறது: கர்நாடக முதல்வர் பேட்டி கர்நாடகா

    தமிழ்நாடு

    16 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    சட்டப்பேரவையில் மதுபான விதித்திருத்தங்கள் தாக்கல் செய்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் தகவல்  தமிழக அரசு
    சென்னை பல்கலைக்கழகம் - ஆன்லைனில் பி.காம், பிபிஏ இளநிலை கல்வி சென்னை
    ரூ.50,000க்கும் கீழ் வரி நிலுவை வைத்துள்ள வணிகர்களுக்கு வரி விலக்கு - மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025