தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர்
தமிழநாட்டில் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்த விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதன்படி, தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஒப்புதலுடன் இதற்கான தடைமசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஒப்புதலுக்காக தமிழகஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் அவர் ஒப்புதலளிக்காமல் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பிவைத்தார். பின்னர் அவர் கேட்டிருந்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டு மீண்டும் அதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக முதல்வர் ஆளுநருக்கு அண்மையில் அனுப்பிவைத்தார். எனினும் அவர் ஒப்புதல் அளிக்காமல் காலம்தாழ்த்தி வந்தார். இதற்கிடையே இன்று ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த ஆன்லைன் ரம்மி தடைமசோதாவிற்கு தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.