NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம் - 144 உறுப்பினர்கள் ஆதரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம் - 144 உறுப்பினர்கள் ஆதரவு
    தமிழக ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம் - 144 உறுப்பினர்கள் ஆதரவு

    தமிழக ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம் - 144 உறுப்பினர்கள் ஆதரவு

    எழுதியவர் Nivetha P
    Apr 10, 2023
    01:06 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தான் பதவியேற்றதில் இருந்தே தமிழக அரசுடன் மோதல் போக்கினை கையாண்டு வருகிறார்.

    ஆளுநர் மாளிகையில் வேண்டுமென்றே சில விழாக்களை நடத்தி அதில் ஆர்.எஸ்.எஸ்.பாஜவினுடைய கருத்துக்களை திணிப்பது,

    தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்றே சொல்லலாம் என்றுக்கூறியது,

    பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடுஅரசின் இலட்சினைக்கு பதிலாக ஒன்றியஅரசின் இலட்சியினையை அச்சடித்தது என ஏராளாமான விஷயங்களை அவர் செய்துகொண்டு வருகிறார்.

    இவரது இந்த செயல்களுக்கு அரசியல் தலைவர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து கொண்டுதான் உள்ளார்கள்.

    இதற்கிடையே ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்க ஒப்புதல் அளிக்க தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

    ஆனால் அவர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பி வைத்தார்.

    144 உறுப்பினர்கள் ஆதரவு

    எண்ணி கணிக்கும் முறையில் தீர்மானத்திற்கு அனுமதி

    மீண்டும் அதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக முதல்வர் ஆளுநருக்கு அண்மையில் அனுப்பிவைத்தார்.

    அதற்கும் ஒப்புதல் அளிக்கமால் காலம் தாழ்த்தி வருகிறார்.

    இதனால் ஆளுநருக்கு எதிர்ப்புத்தெரிவித்து தமிழக சட்டசபையில் தனித்தீர்மானத்தினை அமைச்சர் துரைமுருகன் தாக்கல்செய்தார்.

    இதனிடையே அ.தி.மு.க.கட்சியினர் வெளிநடப்பு செய்த காரணத்தினால் எண்ணிக்கணிக்கும் முறையில் தீர்மானத்திற்கு அனுமதியளிப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

    இதனையடுத்து ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் குறித்து சபையில் கதவுகள் மூடப்பட்டு வாக்கெடுப்பு நடந்துள்ளது.

    இதில் உறுப்பினர்கள் எழுந்துநின்று ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு ஆதரவளித்தனர்.

    அதன்படி அவருக்கு எதிராக 144 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததையடுத்து இந்த தனித்தீர்மானமானது நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தமிழகஅரசுடன் தொடர்ந்து மோதல்போக்கில் ஈடுபட்டு வரும் ஆளுநருக்கு குடியரசுத்தலைவர் அறிவுரை வழங்கவேண்டும் என்றே தமிழக முதல்வர் இந்த தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    ஆர்.என்.ரவி
    தமிழக அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ்நாடு

    பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாக்ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது தமிழ்நாடு செய்தி
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    சென்னை ஐஐடியில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை சென்னை
    தமிழகத்தை குப்பைத்தொட்டியாக பயன்படுத்தும் கேரளா: முதல்வர் ஏன் கண்டிக்கவில்லை, பாஜக தலைவர் கேள்வி பாஜக

    ஆர்.என்.ரவி

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் சிதம்பரம் கோவில்
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஆளுநர் மாளிகை

    தமிழக அரசு

    ரூ.25.14 கோடி செலவில் 'நீலகிரி வரையாடு திட்டம்' - தமிழக அரசாணை பிறப்பிப்பு தமிழ்நாடு
    கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க அரசு முடிவு - அடுத்த மாதம் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மெரினா
    கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரூ.1 கோடி செலவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு நிறைவு தமிழ்நாடு
    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி போராட்டம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025