
17 நாட்கள் பயணம்..18 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்: அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார்.
17 நாட்கள் நீடித்த அவரது சுற்றுப்பயணத்தில், பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, தமிழகத்தில் தொழில் துவங்க பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
இதுவரை, 18 நிறுவனங்கள் உடன் 7,616 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
பயணத்தில் கடைசி நாளான இன்று அதிகாலையில் கூட சிகாகோவில் ஆர்.ஜி.பி.எஸ்.ஐ நிறுவனத்துடன் 100 கோடி ரூபாய் முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிறுவனம் ஓசூரில் தனது கிளையை திறக்க முடிவு செய்திருக்கிறது.
இதனையடுத்து தனது அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு, இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் இருந்து சென்னைக்கு திரும்புகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
குட்பை USA
#CLICKS | அரசு முறை பயணம் முடிந்து அமெரிக்காவில் இருந்து சென்னை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.#SunNews | #CMMKStalinVisitUS | @mkstalin pic.twitter.com/R78tuXprld
— Sun News (@sunnewstamil) September 13, 2024
ட்விட்டர் அஞ்சல்
சென்னைக்கு திரும்பும் முதல்வர் ஸ்டாலின்
#Watch | தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டார்!
— Sun News (@sunnewstamil) September 13, 2024
அவரின் வருகைக்கு நன்றி தெரிவித்து அமெரிக்க வாழ் தமிழர்கள், சிகாகோ விமான நிலையத்தில் பதாகை ஏந்தி வழியனுப்பி வைத்தனர்!#SunNews |… pic.twitter.com/U1Egt4IIeR