பொங்கல் பண்டிகை 2024: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, இந்தாண்டு, ஜனவரி 15ஆம் தேதி (நாளை) கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 'உழவு, தமிழர்களின் தொழில் மட்டுமல்ல, பண்பாட்டு மரபு. அதனால்தான் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக பொங்கல் திருநாளைக் கொண்டாடி வருகிறோம்'. 'தை முதல்நாள் உழைப்பின் திருநாளாக தமிழர் பெருநாளாக கொண்டாடி வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக கூடுதல் மகிழ்ச்சிக்குரியதாக, தமிழகத்தில் திமுகவின் தனிப்பெரும் ஆட்சி நடைபெற்று வருகிறது. பொங்கல் திருநாள் மட்டுமல்ல, எல்லா நாளும் மகிழ்ச்சிக்குரிய நாள் என சொல்லத்தக்க வகையில், திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது' என தெரிவித்துள்ளார்.