NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை: தமிழக முதல்வர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை: தமிழக முதல்வர்
    செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை

    முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை: தமிழக முதல்வர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 07, 2023
    06:15 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகையாக ரூ.1000 தரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக தற்போதைய ஆளும்கட்சியான திமுக கூறியிருந்தது.

    அதேப்போல் இத்திட்டம் குறித்த அறிவிப்பு இந்தாண்டு நிதிநிலை அறிக்கையிலும் இடம்பெற்றிருந்தது. அப்போது இந்த திட்டம் குறித்த விளக்கத்தினையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியிருந்தார்.

    அதன்படி, மீனவ மகளிர், நடைபாதையில் வணிகம் செய்வோர், ஒருநாளைக்கு பல்வேறு வீடுகளில் வீட்டுவேலை செய்யும் பெண்கள், கட்டுமானத்தொழில் செய்யும் பெண்கள், சிறியக்கடைகள்-வணிக கடைகள் போன்ற சிறுசிறு நிறுவனங்களில் பணிபுரிந்து குறைந்தளவு வருமானம் பெறும் பெண்கள் போன்றோருக்கு இந்த உரிமைத்தொகை அவரவர் வங்கிக்கணக்கிலேயே நேரடியாக செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த திட்டத்தை செயல்படுத்த, இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    card 2

    செப்டம்பர் 15ஆம் தேதி முதல் உதவி தொகை

    கூட்டத்தின் நிறைவாக, வருகிற செப்டம்பர் 15ந்தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, மகளிர் உரிமைத்தொகை பெற பயனாளிகளுக்கான தகுதிகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    அதன்படி, 5 ஏக்கர் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 இல்லை.

    ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.

    சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் மேல் உள்ளோருக்கு உரிமைத்தொகை கிடையாது.

    பெண் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாது.

    எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ அந்த கடையில் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு 'முத்தமிழறிஞர் கலைஞர்' பெயர் சூட்டப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    தமிழக அரசு
    தமிழகம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    விபத்தில் குடும்பத்தையே இழந்த மாணவி அமுதாவின் மேற்படிப்புக்கு உதவ முன்வந்தது பள்ளிக்கல்வித்துறை சேலம்
    பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம் பொறியியல்
    வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்: மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு  தேர்தல் ஆணையம்
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி

    தமிழ்நாடு செய்தி

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார் தமிழ்நாடு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் ரயில்கள்
    தமிழகத்தில் எங்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை-விளக்கமளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன் இந்தியா
    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு

    தமிழக அரசு

    கருணாநிதி பேனா நினைவு சின்ன கட்டுமானத்தினை ஒருங்கிணைக்க அதிகாரி நியமனம் திமுக
    சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதில் மாற்றம் சென்னை
    தமிழக வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - தலைமைச்செயலாளர் இறையன்பு  தமிழ்நாடு
    சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்  தமிழ்நாடு

    தமிழகம்

    அதிமுகவும் அமமுகவும் இணைந்து செயல்படும்: டிடிவி தினகரன்  தமிழ்நாடு
    ஒரே பதிவெண்ணில் 2 வேன்கள்: வேலூரில் பல லட்சம் லிட்டர் பால் திருட்டு தமிழ்நாடு
    குடும்பத்தினருடன் ஊட்டி ரயிலில் பயணம் செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டி
    11 தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025