NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - விசாரணைக்கு ஆஜராக 8 பேருக்கு சம்மன் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - விசாரணைக்கு ஆஜராக 8 பேருக்கு சம்மன் 
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - விசாரணைக்கு ஆஜராக 8 பேருக்கு சம்மன்

    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - விசாரணைக்கு ஆஜராக 8 பேருக்கு சம்மன் 

    எழுதியவர் Nivetha P
    May 03, 2023
    02:48 pm

    செய்தி முன்னோட்டம்

    திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.

    இவர் காவல் நிலையத்திற்கு சிறிய குற்றங்களுக்காக விசாரணைக்கு அழைத்து வருவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வருகிறார் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து பல்வீர் சிங் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட அதிகாரியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா நியமனம் செய்யப்பட்டார்.

    அதேபோல் ஒரு மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    காவல்துறை

    இடைக்கால அறிக்கை தாக்கல் 

    இந்நிலையில், தற்போது மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அமுதா 2ம் கட்ட விசாரணையினை நடத்துகிறார்.

    இதற்கிடையே பல்வீர் சிங் மீது திருநெல்வேலி மாவட்ட குற்ற பிரிவு காவல்துறை 324, 326 மற்றும் 506-1 உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்துள்ளார்கள்.

    இதனிடையே அமுதா தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கையில், வழக்கின் விசாரணையினை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதனால் டிஜிபி சைலேந்திர பாபு அவர்களும் சிபிசிஐடி-க்கு விசாரணையினை மாற்றியமைத்து உத்தரவிட்டார்.

    அதன்படி, ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

    மேலும் வரும் 5ம் தேதி சிபிசிஐடி அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    திருநெல்வேலி
    சிபிசிஐடி

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    தமிழக அரசு

    3 வகையான சத்துமாவு திட்டம்: மார்ச் 1ஆம் தேதி ஆரம்பம் தமிழ்நாடு
    புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றம்-அறிக்கையளிக்க தமிழக அரசு உத்தரவு தமிழ்நாடு
    தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு - விவரங்களை அனுப்புமாறு உத்தரவு தமிழ்நாடு
    பாரா ஒலிம்பிக் வீராங்கனை தீபாவை பகுதிநேர பயிற்சியாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவு விளையாட்டு

    திருநெல்வேலி

    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை காவல்துறை
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு வைரல் செய்தி
    வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்திருவிழா முன்னிட்டு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை உள்ளூர் செய்தி

    சிபிசிஐடி

    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு
    ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் தொழில்நுட்பம்
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025