NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் ஆகஸ்ட் 27 முதல் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்
    சென்னையில் ஆகஸ்ட் 27 முதல் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்
    இந்தியா

    சென்னையில் ஆகஸ்ட் 27 முதல் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்

    எழுதியவர் Nivetha P
    August 25, 2023 | 05:23 pm 1 நிமிட வாசிப்பு
    சென்னையில் ஆகஸ்ட் 27 முதல் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்
    சென்னையில் ஆகஸ்ட் 27 முதல் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்

    சென்னை கடற்கரை-எழும்பூர் ரயில் நிலையம் இடையே 4வது வழித்தடம் அமைக்கப்படவுள்ளதால் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் பறக்கும் ரயில்கள் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைநகர் சென்னையில் ஏற்படும் கூட்டநெரிசலில் சிக்காமல் பயணம் மேற்கொள்ள நினைக்கும் மக்கள் ரயில் சேவைகளை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக ரூ.279 கோடி மதிப்பீட்டில் 4 கி.மீ., தொலைவிற்கு சென்னை கடற்கரை-எழும்பூர் வழித்தடத்தில் 4ம் வழித்தடம் அமைக்கும் பணி துவங்கவுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. எனவே, சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் அடுத்த 7 மாதங்களுக்கு சிந்தாந்திரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே சென்னை கோட்ட பொது மேலாளர் அறிவித்துள்ளார்.

    ரயில்கள் சேவைகள் நிறுத்தப்படாது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் உறுதி 

    மேலும் அவர் பேசுகையில், சென்னை மாநகரில் ஒரு டிக்கெட் மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளை பயன்படுத்தும் திட்டமானது பரிசீலனையில் உள்ளது என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைப்பதற்கான வரைபடம் தயார் செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே, சென்னை கடற்கரை-சேப்பாக்கம் இடையேயான பறக்கும் ரயில் சேவை 7 மாதங்களுக்கு நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் அதற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சென்னை கடற்கரை-சேப்பாக்கம் இடையேயான பறக்கும் ரயில் சேவை நிறுத்தும் திட்டம் கைவிடப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    பயணம்
    ரயில்கள்

    சென்னை

    சென்னையில் ஒரு சதுரடி நிலம் ரூ.1,000 ஆக நிர்ணயம் தமிழ்நாடு
    பிறந்தநாளை முன்னிட்டு, நாளை  தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  தேமுதிக
    தீபாவளி பண்டிகை - சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை  பண்டிகை
    சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு கேரளா

    பயணம்

    சோலோ ட்ரிப் போவதற்கு, இந்தியாவில் பாதுகாப்பான இடங்கள் என்னென்ன? சுற்றுலா
    சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிகரித்த விமானக் கட்டணங்கள் விமான சேவைகள்
    விமான பயணத்தில் கேபின் பேகேஜில் அனுமதிக்கப்படாத பொருட்களின் பட்டியல்  விமானம்
    முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாளை வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நீலகிரி

    ரயில்கள்

    மத்திய பிரதேசத்தில் கஜுராஹோ - உதய்பூர் இன்டர்சிட்டி ரயில் என்ஜினில் தீ விபத்து மத்திய பிரதேசம்
    பெங்களூரில் உத்தியான் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து பெங்களூர்
    பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: 33 பேர் பலி பாகிஸ்தான்
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது? மகாராஷ்டிரா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023