NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 யானைகள் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 யானைகள் பலி
    ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 யானைகள் பலி

    ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 யானைகள் பலி

    எழுதியவர் Nivetha P
    Mar 27, 2023
    01:24 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனச்சரகம் உள்ளூர்தண்டா வனப்பகுதியில் வனவிலங்குகள் அதிகம் காணப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம்(மார்ச்.,25) வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது வனப்பகுதிக்கு செல்லும் சாலையோரம் 30வயது மதிக்கத்தக்க ஆண்யானை ஒன்று இறந்து கிடந்தது.

    இதனை பார்த்த அவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

    இதனையடுத்து கால்நடை மருத்துவர்களும், வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து, யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.

    அந்த அறிக்கையில் யானைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட சண்டையில் இந்த 30 வயது மதிக்கத்தக்க யானை பலத்த காயங்களால் உயிரிழந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

    பின்னர் அந்த யானையின் தந்தங்களை பத்திரமாக வெட்டிஎடுத்து சென்னம்பட்டி வனச்சரக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    பிரேதபரிசோதனை செய்த இடத்திலேயே அந்த யானையின் உடல் நல்லடக்கமும் செய்யப்பட்டது.

    சரிந்து விழுந்து மரணம்

    தாய் யானை மற்றும் 2 வயதுடைய குட்டி யானை உயிரிழப்பு

    இதே போல் அந்தியூர் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் கண்ணில் ஒரு பெண் யானையும், குட்டி யானையும் இறந்து கிடந்தது தென்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்திலேயே அதிகாரிகள் முன்னிலையில் யானைகளுக்கு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதில் யானைகள் மேடான பகுதியிலிருந்து சரிந்து விழுந்ததில் பலியாகி இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    அந்த பெண் யானைக்கு 30 வயதும், குட்டி யானைக்கு 2 வயதும் இருக்கலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இறந்து போன அந்த இரண்டு யானைகளின் உடல்கள் மற்ற வன விலங்குகளின் உணவுக்காக அப்படியே விடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரோடு
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஈரோடு

    ஈரோடு இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கமலஹாசன் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிப்ரவரி 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம் தேர்தல்
    ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-மாவட்ட நிர்வாகம் அறிமுகம் மாவட்ட செய்திகள்

    தமிழ்நாடு

    வானிலை அறிக்கை: மார்ச் 20- மார்ச் 24 புதுச்சேரி
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் தூத்துக்குடி
    தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கிறது - பட்ஜெட் பற்றி கமல்ஹாசன் கமல்ஹாசன்
    ஆஸ்கார் விருது வென்ற , 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' குறும்பட இயக்குனரை நேரில் அழைத்து கௌரவித்த முதல்வர் ஸ்டாலின் ஆஸ்கார் விருது
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025