NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வெள்ள நிவாரண பணிகளை முடிக்கிவிட்டுள்ள தமிழக அரசு; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெள்ள நிவாரண பணிகளை முடிக்கிவிட்டுள்ள தமிழக அரசு; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை 
    சென்னையில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு நிலவுவதால், பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் கூட்டம்

    வெள்ள நிவாரண பணிகளை முடிக்கிவிட்டுள்ள தமிழக அரசு; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை 

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 06, 2023
    07:42 pm

    செய்தி முன்னோட்டம்

    இரு தினங்களுக்கு முன்னர் தமிழகத்தை தாக்கிய மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    குறிப்பாக தலைநகர் சென்னையில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நகரின் அனைத்து சுரங்க பாதைகளும் நீரில் மூழ்கியது. பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    அதேநேரத்தில், பால், குடிநீர், மின்சாரம், தொலைத்தொடர்பு போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

    பல இடங்களில் மக்கள் இதனால் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்நிலையில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்றைய தினம் நிலைமை நன்கு சீரடைந்து விட்டது. நாளை முதல் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது" என நேற்று தெரிவித்திருந்தார்.

    card 2

    #NoPanicBuying 

    இருப்பினும் இன்று பல இடங்களுக்கு பால் விநியோகம் தாமதமாக வந்தது. அதனால், பொதுமக்கள் வாங்கி சேமித்து வைக்கும் எண்ணத்துடன், தேவைக்கும் அதிகமாக வாங்கியதாக கூறப்பட்டது.

    இதன் காரணமாக இணையத்தில், #NoPanicBuying என்ற ஹாஷ் டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மறுபுறம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் பணியில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தமிழக அரசு ஏரியாவாரியாக வாட்ஸ்அப் எண்களை அறிவித்துள்ளது.

    அதேபோல, பால், குடிநீரை போன்ற அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா எச்சரித்துள்ளார்.

    card 3

    தலைமை செயலர் கூறியது என்ன?

    "மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகுகள் மூலம் உணவு வழங்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. துப்புரவு பணிகளில் பிற மாவட்டங்களில் இருந்து வந்த பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் 4% பகுதிகளில் மின்விநியோகம் வழங்கப்படவில்லை" என தெரிவித்தார்.

    "அடையாற்றில் 37,000 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக 5 லட்சம் லிட்டர் பால் வழங்கப்படாமல் உள்ளது. உயிரிழப்புகளை தடுக்கவே மின் இணைப்பு வழங்கப்படவில்லை. பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வெள்ளம்
    சென்னை
    தமிழக அரசு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    வெள்ளம்

    வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  பருவமழை
    வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட்  ஹிமாச்சல பிரதேசம்
    டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்  டெல்லி

    சென்னை

    அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை உண்டா? தமிழ்நாடு
    சென்னையில் தொடரும் மழை: 3 நாட்களில் தமிழக-ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நெருங்க இருக்கும் சூறாவளி புயல் தமிழ்நாடு
    தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் 500 மீட்புப்படையினர், 1100 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணி
    பருவமழை, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை வானிலை அறிக்கை

    தமிழக அரசு

    தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு  தமிழ்நாடு
    சிவகாசி பட்டாசு விபத்து - உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடும் உறவினர்கள்  விருதுநகர்
    இஸ்ரேலில் இருந்து தமிழகம் வந்தடைந்த 147 பேர் - அயலக தமிழர் நலத்துறை அறிவிப்பு  இஸ்ரேல்
    ஆன்லைனில் கட்டிட அனுமதிக்கான பட்டா சரிபார்ப்பு - தமிழக அரசு அசத்தல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025