கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் பிரபல தின பூமி நாளிதழ் உரிமையாளர் மரணம்
செய்தி முன்னோட்டம்
கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் பிரபல தினபூமி நாளிதழின் உரிமையாளர் மணிமாறன் உயிரழந்துள்ளார்.
மணிமாறனும் அவருடைய மகன் ரமேஷ் குமாரும், தினபூமி நாளிதழின் முதன்மை செய்தி ஆசிரியர் இல்ல நிகழ்விற்கு சென்று திரும்பும் வழியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பட்டை இழந்த கார், எதிர்புறம் வந்த வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மணிமாறன் உயிரழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் வாகனத்தை ஒட்டி வந்த அவருடைய மகன் ரமேஷ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிமாறன் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#தினபூமி நாளிதழின் உரிமையாளர் மணிமாறன் உயிரிழப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !#Dinaboomi #Manimaran #CMMKStalin #death #RIP #KalaignarSeithigal pic.twitter.com/bsVqFL6LGk
— Kalaignar Seithigal (@Kalaignarnews) October 14, 2024
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
தினபூமி பத்திரிக்கை உரிமையாளர்
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) October 14, 2024
திரு. மணிமாறன் அவர்கள் இன்று கோவில்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் பயணம் செய்த அவரது மகன்…