NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு
    தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு

    எழுதியவர் Nivetha P
    Feb 22, 2023
    04:34 pm
    தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு
    தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு

    மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியை சேர்ந்த நெசவாளர் முனுசாமி-மங்கம்மாள் தம்பதிக்கு தென் ஆப்ரிக்காவில் 1898ம்ஆண்டு பிப்ரவரி 22ம்தேதி பிறந்தவர் தில்லையாடி வள்ளியம்மாள். தென் ஆப்ரிக்காவில் இந்தியர்களுக்கு ஆங்கிலேயரால் விதிக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து 1913ல் காந்தியடிகள் போராட்டங்கள் நடத்தினார். அவரது சொற்பொழிவுகள் சிறுமியான வள்ளியம்மை மனதில் ஆழமாக பதிந்தது. காந்தியடிகள் நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்டார். கிறிஸ்தவ திருமணங்கள் மட்டுமே செல்லும், அதுமட்டும் தான் பதிவு செய்யப்படும் என்னும் சட்டத்தை எதிர்த்து ஜோகன்னஸ்பர்க்கில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த மகளிர் சத்தியாகிரகப்படையினருக்கு வள்ளியம்மை தொண்டு செய்தார். தடையை மீறி போராட்டம் செய்ததற்காக விதிக்கப்பட்ட அபராதத்தை கட்ட மறுத்து, 3மாத சிறை தண்டனையை ஏற்றுக்கொண்டார். தண்டனை காலம் முடியும் முன்னரே விடுதலை பெற வாய்ப்பிருந்தும் அவர் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

    2/2

    தனது 16வது வயதிலேயே இந்தியாவிற்காக போராடி உயிர்நீத்த 'முதல் விடுதலை போராளி'

    இதனையடுத்து சுகாதாரமற்ற சூழல், அதிகமான சிறைபணியால் வள்ளியம்மை உடல்நலன் மிகவும் பாதிப்படைந்தது. சிறையில் இருந்து விடுதலையான 10 நாட்களில் 1914 பிப்ரவரி 22ம் தேதியான தனது பிறந்தநாளன்றே மறைந்தார். இதுகுறித்து காந்தியடிகள் இந்தியாவின் ஓர் புனித மகளை இழந்துவிட்டோம், ஏன் எதற்கு என்று தெரியாமலேயே தனது கடமையை செய்தவர் இவர். மனோபலம், தன்மானம் கொண்ட வள்ளியம்மையின் தியாகம் இந்திய சமூகத்திற்கு நிச்சயம் பலன் தரும் என்று இரங்கல் தெரிவித்தார். இதனைதொடர்ந்து, தில்லையாடியில் இவரது நினைவு மண்டபம் உள்ளது, மேலும் ஓர் நூலகமும் செயல்பட்டு வருகிறது. தனது 16வது வயதிலேயே இந்தியாவிற்காக போராடி உயிர்நீத்த 'முதல் விடுதலை போராளி' வள்ளியம்மை ஓர் தமிழ் பெண் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    இந்தியா

    சாதிய பாகுபாட்டை தடை செய்த அமெரிக்காவின் முதல் நகரம் உலகம்
    இணையத்தில் கசிந்த புதிய மோட்டோரோலா ரேசர் 2023 மோட்டோரோலா
    தங்கம் விலை இன்று குறைவு - இன்றைய விலை விபரம் தங்கம் வெள்ளி விலை
    2023 யமஹா: புதிய அம்சங்களுடன் ஃபசினோ மற்றும் ரே ZR மாடல்கள் வெளியீடு யமஹா

    தமிழ்நாடு

    தமிழகத்திலேயே முதன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த பெண் உதவி ஆய்வாளர் சென்னை
    சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது உண்மையா சென்னை
    வானிலை அறிக்கை: பிப்ரவரி 22- பிப்ரவரி 26 வானிலை அறிக்கை
    திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி திண்டுக்கல்

    மாவட்ட செய்திகள்

    கரூரில் மர்ம விலங்கு தாக்கி 6 ஆடுகள் பலி - பீதியில் கிராம மக்கள் தமிழ்நாடு
    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ தமிழ்நாடு
    சென்னையில் 1,470 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை சென்னை
    கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டத்தின் 2ம் நாளில் குவிந்த பக்தர்கள் கன்னியாகுமாரி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023