Page Loader
தஞ்சாவூரில் பயங்கரம்: அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை
தஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியர் குத்திக்கொலை

தஞ்சாவூரில் பயங்கரம்: அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 20, 2024
02:12 pm

செய்தி முன்னோட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே உள்ளது சின்னமனை. அங்கே உள்ள அரசுப்பள்ளியில் வகுப்பறையிலேயே வைத்து ஆசிரியை ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 26 வயது கொண்ட ரமணி என்ற ஆசிரியை மல்லிப்பட்டினம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் அங்கு பணியில் சேர்ந்துள்ளார். இன்று காலை, ரமணி வகுப்பறையில் இருந்தபோது, சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த மதன் குமார் என்ற நபர் அவரை கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விசாரணை

திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் கொலை எனத்தகவல்

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மதன் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்ப நிலைத் தகவல்களின் படி, மதன் குமாரும், ரமணி யும் காதலித்து வந்துள்ளனர். நேற்று இரவு அவரை பெண் கேட்டு வீட்டிற்கு சென்றுள்ளார் மதன். எனினும் ரமணியின் பெற்றோர் பெண் தர மறுத்ததனால் ஆத்திரம் அடைந்த மதன், ரமணியை கொலை செய்துள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்த விவகாரத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.